மே 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வெந்து தணியாத நிலம்
      கோத்தபாயவுடன் ஜனாதிபதி முறையும் ‘Go Home'
      கல்வி, வேலைவாய்ப்பு: பெருந்தொற்றின் பெருந்தாக்கம்
      இமயமலைச் சாரலில் காலநிலை மாற்றமும் நில அரசியலும்
      கணினித் தலைமுறையின் இலக்கியப் பங்களிப்பு
    • கதை
      கிழிவு
      இணை
    • பாரதியியல்
      “ஈனப் பறையர்க ளேனும்...” பாரதி பாடல் சர்ச்சை
    • நாடகம்
      ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘கதையல்ல வாழ்க்கை’ மேடை நிகழ்த்தும் மாயம்
    • அஞ்சலி: ஷேன் வார்ன் (1969-2022)
      பந்தை ஏந்திய மந்திரவாதி
    • பதிவு
      ஒரு மாலையும் இரண்டு நூல்களும்
    • திரை
      மீட்பர் மனநிலையற்ற ஜெய் பீமும் இன்னபிற திரைப்படங்களும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      இரண்டாம் வரலாறு
    • நேர்காணல்: டி.எம். கிருஷ்ணா
      அவர்களைப் பொறுத்தவரை நான் துரோகி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2022 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

‘அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்’ கட்டுரை சமீபத்தில் படித்த ஆழமான, அற்புதமான கட்டுரைகளில் ஒன்று’

மாயயதார்த்தப் புனைவுக்குக் குதிரைவால் அற்புதமான தொடக்கப்பள்ளி. அதைத் தனது அரசியல் சமூகவியல் புரிதல்களைப் பரப்பும் யதார்த்தவாதப்படமாக மாற்றி அதையும் சரியாக எடுக்காமல் தோல்வியுற்றது வருந்தத்தக்க ஒன்று. இத்தோல்வி, இத்தகைய நல்ல முயற்சிகள் இன்னும் சில ஆண்டுகள் நடக்காமல் செய்து விடும். அவ்வகையில் அப்படத்தின் குறைகளைப் புரிந்து கொள்வது இனி இத்தவறுகள் நடக்காதிருக்க உதவும்.

படம் முழுக்கவும் எம்ஜிஆரைச் சீண்டியுள்ளது. புனிதப்பிம்பங்களைக் கேள்விகளுக்கு உட்படுத்துவது அவசியமான ஒன்றுதான். இலக்கிய உலகில் இவை நடக்கின்றன. வலுவான ஒருவரைக் கேள்விக் கேட்டுப் பிரச்சினைகளைச் சந்திக்கும் இலக்கியவாதிகள் உண்டு. நாடு, கடத்தல், சிறை என வெளிநாடுகளிலும் இலக்கியம் இதைச் சந்திக்கிறது.

எந்தத் தலைவரைத் தொட்டால் பிரச்சினை வராது என நன்றாக யோசித்து, புனிதத்தை உடைப்பது படைப்புலகம் கண்டிராத ஒன்று. சர்வாதிகாரிகள் ஆளும் தேசங்களில் முந்தைய தலைவர்களை, எதிரி நாட்டுத்தலைவர்களை இழிவுபடுத்தி ஆட்சியாளர்களைக் குளிர்விக்கும் நூல்கள் / படங்களைப் பார்த்திருக்கிறோம்.

(சர்வாதிகாரம் நீங்கியதும் ஆட்சியாளர்களால் இழிவுக்கு உள்ளான தலைவர்கள் புத்துயிர் பெறுவதையும் பார்த்துள்ளோம்)

நம்நட்டிலும் இத்தகைய போக்கு ஆரம்பித்து இருப்பது ஆபத்தானது. இலக்கு வேறு பயணம் வேறு அல்ல. உயர் நோக்கங்களை நோக்கிய பயணமும்கூட உயரிய விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுரையின் பார்வை படைப்பாளிகள் அனைவருக்குமான அவசியத் தேவை.

பிச்சை
சென்னை

‘காங்கிரஸ் கட்சியின் தார்மீகத் தோல்விகள்’ தலையங்கத்தை மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் வாசித்தேன். என் மனத்தில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி என்னென்ன எண்ண ஓட்டங்கள் இருந்ததோ அவை அனைத்தும் தலையங்கத்தில் இருப்பதைப் படிக்கப் படிக்க எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

நூறாண்டுகள் கடந்த பாரம்பரியம்மிக்க ஒரு கட்சியின் செயலற்ற தன்மையானது ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் கவலைகொள்ளச் செய்கிறது. ஆளுங்கட்சிக்குச் சரியான எதிர்க்கட்சி அமையவில்லை என்று சொன்னால் ஆளுங்கட்சி, தான் நினைப்பதெல்லாம் செய்யத் துடிக்கும். மக்களை மூளைச் சலவை செய்து வாக்குகளாக மாற்றும் அரசியல் கட்சிகளின் தந்திரம் ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துவிடுகிறது.

காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களைவிடத் தலைவர்களே அதிகம். இவர்கள் கிராம அளவில் கட்சியை வளர்ப்பதற்காகவும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கட்சியின் பலத்தைக் கூட்டுவதற்காகவும் எந்தவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரியவில்லை. மக்கள் காங்கிரஸ் கட்சியின்மீது இன்றளவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் செயல்பாடுகள் அக்கட்சியிடம் இருக்கிறதா என்றால் ஒன்றுமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாகச் சட்டமன்றத் தேர்தல்களில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருப்பதைக் காங்கிரஸ் கட்சி ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். மக்களுக்கான கட்சியாக மக்களோடு மக்களாகத் தொண்டர்களைத் திரட்டும் கட்சியாகவும் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் கட்சியாகவும் காங்கிரஸ் கட்சி மாறினால்தான் எதிர்காலத்தில் மக்களின் ஆதரவைப் பெற முடியும். ஆளுங்கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகச் சரிப்படுத்திக்கொண்டால் ஜனநாயகம் வலுப்படும்.

கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி

ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ள உக்ரைன் பற்றி வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட கட்டுரைகளில் விஜய் பிரசாத்தின் பேட்டி முக்கியமானது. உக்ரைன் போருக்கான அடிப்படைக் காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருக்கும் காரணங்கள் நுட்பமானவை, உக்ரைன் போருக்கான அடிப்படை அவைதான். அபூர்வமான பேட்டி அது.

சக்கரியாவின் சிறுகதை நன்றாக இருந்தது. ஏதாவதொரு மலையாளச் சிறுகதை அல்லது பிறமொழிச் சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன். பெருமாள் முருகனின் கட்டுரையும் நன்றாக இருந்தது.

வண்ணநிலவன்
சென்னை

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.