செப்டம்பர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வங்கத்தின் எழுச்சியும் எதேச்சாதிகாரத்தின் வீழ்ச்சியும்
      ஆங்கிலேயர்களை அதிரவைத்த ஆர்ப்பாட்டங்கள்
      உள்ஒதுக்கீடு: சமூக நீதியின் நீட்சி
      சண்டாளனும் பறையனும்: மொழியில் மிஞ்சும் அதிகாரம்
      இலக்கிய விழாக்கள் எதிர்கொள்ளும் யதார்த்தம் ஒரு தென்னிந்தியக் காட்சி
    • உரை
      எம்.ஏ. நு-ஃமான்: தீக்குள் இருந்தும் சிரிக்கலாம்
    • கதை
      கடுவன்களின் இரண்டாம் கதை
    • மேடை
      ஒளியமைப்பாளனின் மனப்பதிவுகள்
    • அஞ்சலி: முத்தம்மாள் பழனிசாமி (1933-2024)
      தலைமுறைகளின் பெரு வாழ்வு
    • தொடர்
      பா.ரா.சு.: சொற்களைத் தேடும் வேடன்
    • ஆவணப்படம்
      கலைவெளிப் பயணத்தின் பதிவுகள்
    • பதிவு
      வடக்கின் முதல் புத்தகக் காட்சி
    • திரை
      தங்கலான்: கலையும் அரசியலும் முயங்கும் களம்
    • விருது
      நாஞ்சில் நாடனுக்கு ‘கி.ரா. விருது’ - 2024
    • காலச்சுவடு 300--30: சக பயணிகளின் அனுபவங்கள்
      பயணத்தின் சுவடுகள்
    • மதிப்புரை
      துப்பறிவின் கச்சிதம்
    • கவிதைகள்
      திருவாலங்காடு
    • தலையங்கம்
      படுகொலைகள்: நீதியைக் கொல்லும் வழி
    • அறிமுகம்
      குடிப்பெயர்வின் துயரம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2024 அறிமுகம் குடிப்பெயர்வின் துயரம்

குடிப்பெயர்வின் துயரம்

அறிமுகம்
அ.கா. பெருமாள்

19ஆம் நூற்றாண்டின் இந்தியத் தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் தள்ளல் இழுவை காரணிகளின் செயற்பாடும் 
(ஆய்வுக் கட்டுரை)
ரா. நித்தியானந்தன்
சவுத் ஏசியன் பப்ளிகேஷன், 39/7, போர்ச்சூன் ஆகேட், கொழும்பு - 4.
பக். 97
ரூ. 300

19ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடியேறிய தோட்டத் தொழிலாளர்கள், பிற தொழில் செய்த மக்கள் ஆகியோரின் நிலைபற்றி 80க்கும் மேல் புத்தகங்கள் வந்துவிட்டன (அணிந்துரை சந்திரசேகரன்) இவற்றில் மிக ஆழமான குறிப்பிடத்தகுந்த புத்தகம் இது. மொத்தம் இரண்டு இயல்கள். முதல் இயல் அறிமுகம் இரண்டாம் இயல் இந்திய தமிழர் இலங்கைக்கு 19ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்த காரணம், அதன் விளைவு குறித்த செய்திகளைக் கூறுகிறது.

ஒரு இனத்தின் குடிப்பெயர்ச்சி பற்றிய காரணங்கள், அவற்றின் விளைவு, இது பற்றிய கோட்பாடு ஆகிய எல்லாமே அண்மையில் உருவானவை. புலம் பெயர்தல் என்பது வரலாற்று நிகழ்வு. உந்தல், இழுவை ஆகிய காரணிகளின் அடிப்படையில் புலம்பெயர்தல் நிகழ்கிறது. இது தொடர்பான உந்தல், தள்ளல், இழுவை என்னும் சொற்கள் இத்துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரிவான விளக்கம் இந்நூலில் உள்ளது.

குறிப்பிட்ட இனம் ஓரிடத்திலிருந்து குடிபெயர்வதற்குத் தூண்டுதல் ஒரு காரணம். இது தள்ளல் அல்லது உந்துதல் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, உயர் ஊழியம், தொழில் உதவியாளர் என்னும் காரணங்களால் குடி பெயர்வதை இழுவை என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்

குடிப்பெயர்ச்சி பற்றி வந்த ஆய்வுகள் எல்லாமே பொருளாதார, சமூக காரணங்களைக் கூறுகின்றன. ஒருவகையில் பொருள்தேடல், வேலையின்மை, இயற்கைப் பேரிடர், சாதிப் போராட்டம் போன்றவற்றால் குடிபெயர்வதுண்டு. இது தூண்டுதல் எனப்படும்.

அமெரிக்காவை நோக்கி லண்டன் பெருமக்கள் பெருமளவில் குடிபெயர்ந்தனர். 1665 - 1666இல் நடந்த லண்டன் குடிப்பெயர்ச்சிக்குப் பிளேக் நோய் காரணமாக இருந்தது. இதற்கு முன்பு நடந்த குடிப்பெயர்ச்சிக்குச் சமயப் போர் காரணம்.

1839, 1861, 1862 ஆண்டுகளில் தமிழகத்தின் தஞ்சை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இப்படியாகச் சென்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் வரலாற்றில் பின்னர் வறுமை பின்னணியாக இருந்தது. இதற்கு ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டும்; இந்த நூல் இதைக் கூறுகிறது.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தமிழகத்திற்குச் செய்த அநீதி புள்ளி விவரங்களுடன் விளக்கப்படுகிறது தமிழகத்தின் பழைய ஜமீன்தார் முறையை ஒழித்துவிட்டு அதைவிடக் கொடுமையான ஒரு முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். இதனால் சிறு நில உரிமையாளர்கள் வரி கொடுக்க முடியாத நிலையிலாயினர்; நிலங்களை இழந்தனர். இலங்கையின் குடிபெயர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.

தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சங்களுக்கு மழையின்மை ஒரு காரணம் மட்டுமே. பிற காரணங்களுக்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழர்கள் இலங்கைக்கு கஜபாகு மன்னன் காலத்திலும் கண்டிய மன்னன் காலத்திலும் அதன் பிறகு பல காலகட்டங்களிலும் குடிப்பெயர்ந்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

1823 இல் காப்பி தோட்டத்தில் வேலை செய்ய 14 தமிழ்க் குடும்பங்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தன. ஆனால் 1859 இல் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் ஆகிவிட்டது. இதற்குக் காரணமான ஆங்கிலேயர்கள் இந்திய தமிழகத்தைச் சுரண்டிய வரலாற்றைச் சுருக்கமாக இந்த நூல் பேசுகிறது.

தோட்ட மக்களை இலங்கை நகரங்களும் கிராமங்களும் உள்வாங்கவில்லை. இந்த மக்கள்மீதான உதாசீனம் சிங்களர்களிடம் உண்டு. தோட்ட மக்கள் தங்களை இந்தியர்கள் என்று கருதிக்கொண்டதும் ஒரு காரணம்.

இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அது பிரிட்டன் நாடாளுமன்றம், சமூகத்திற்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் தங்கள் வரலாற்றுத் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பு இலங்கை மலையக மக்களுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பாகக்கூட அமையலாம். இந்த ஆதங்கம் நூலாசிரியரிடம் உள்ளது. வெளிப்படையாகவே இதைக் கூறவும் செய்கிறார்.

                        மின்னஞ்சல்: perumalfolk@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.