செப்டம்பர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வங்கத்தின் எழுச்சியும் எதேச்சாதிகாரத்தின் வீழ்ச்சியும்
      ஆங்கிலேயர்களை அதிரவைத்த ஆர்ப்பாட்டங்கள்
      உள்ஒதுக்கீடு: சமூக நீதியின் நீட்சி
      சண்டாளனும் பறையனும்: மொழியில் மிஞ்சும் அதிகாரம்
      இலக்கிய விழாக்கள் எதிர்கொள்ளும் யதார்த்தம் ஒரு தென்னிந்தியக் காட்சி
    • உரை
      எம்.ஏ. நு-ஃமான்: தீக்குள் இருந்தும் சிரிக்கலாம்
    • கதை
      கடுவன்களின் இரண்டாம் கதை
    • மேடை
      ஒளியமைப்பாளனின் மனப்பதிவுகள்
    • அஞ்சலி: முத்தம்மாள் பழனிசாமி (1933-2024)
      தலைமுறைகளின் பெரு வாழ்வு
    • தொடர்
      பா.ரா.சு.: சொற்களைத் தேடும் வேடன்
    • ஆவணப்படம்
      கலைவெளிப் பயணத்தின் பதிவுகள்
    • பதிவு
      வடக்கின் முதல் புத்தகக் காட்சி
    • திரை
      தங்கலான்: கலையும் அரசியலும் முயங்கும் களம்
    • விருது
      நாஞ்சில் நாடனுக்கு ‘கி.ரா. விருது’ - 2024
    • காலச்சுவடு 300--30: சக பயணிகளின் அனுபவங்கள்
      பயணத்தின் சுவடுகள்
    • மதிப்புரை
      துப்பறிவின் கச்சிதம்
    • கவிதைகள்
      திருவாலங்காடு
    • தலையங்கம்
      படுகொலைகள்: நீதியைக் கொல்லும் வழி
    • அறிமுகம்
      குடிப்பெயர்வின் துயரம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2024 மேடை ஒளியமைப்பாளனின் மனப்பதிவுகள்

ஒளியமைப்பாளனின் மனப்பதிவுகள்

மேடை
செ. ரவீந்திரன்

நன்றி: கூத்துப்பட்டறை

கூத்துப்பட்டறை அரங்கில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அன்று வெளி ரங்கராஜன் இயக்கத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாவலின் மேடையாக்கத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவல் ஆங்கில மொழியில் ‘Notes of a Death House’ என்ற பெயரில் வெளிவந்தது. இது பின்னர் தமிழில் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ என்னும் பெயரில் பிரசுரமாகியுள்ளது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யாரென்று என் நினைவில் இல்லை. ஆனால் இந்நாவலை எஸ். ராமகிருஷ்ணன், ரமேஷ் இணைந்து அதே பெயரில் நாடகமாக உருவாக்கியுள்ளனர். இந்நாடகம் முதலில் வெளி ரங்கராஜனின் நாடக வெளி என்னும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. பின் அதனையே அவர் தன் நாடகக் குழுவினர்மூலம் கூத்துப்பட்டறையில் மேடையேற்றி இயக்கியுள்ளார்.

தமிழில் இலக்கியரீதியான அளவில் மேடையேற்றுவதற்கான படைப்புக்கள் இல்லாத சூழலில் தஸ்தயேவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாவலை நாடகமாக்கிக் கொடுத்துள்ள இருவரையும் நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் தமிழ் நாடகவுலகில் மேடையேற்றத்துக்கான நாடகப் பிரதிகள் இல்லாத வறிய சூழலில் ஒரு நாவலை நாடகமாக வடிவமைத்துக் கொடுத்தது தமிழ் நாடகவுலகுக்கு மிகவும் தேவையானதாகும்.

பிறப்பு இறப்பு - எப்படி நம் கையில் இல்லையோ அதுபோல நாம் வாழும் வாழ்வும் நம் கையில் இல்லை. சிறைக்குள்ளும் சிறைக்கு வெளியேயும் உள்ள மாந்தர்களின் வாழ்வெல்லாம் அரசு இயந்திரத்தின் எதேச்சாதிகார ஆணையால் கட்டுப்பட்ட ஒன்று. மரண வீடு இங்கு சிறைக்கூடம் மட்டுமன்றி நாம் வாழும் உலகையும் சுட்டுகிறது. இங்கு விதிக்கப்பட்ட வாழ்நெறிமுறைகளே குறிப்புக்களாக உள்ளன. இவை நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன. நோம் சோம்ஸ்கியின் வார்த்தைகளில் சொன்னால் ‘Manufacturing Consent’ எனச் சொல்ல வேண்டும்.

மரண வீடாக உருவங்கொள்ளும் சிறைக்கூடத்தின் அரங்க வடிவம் பாராட்டுக்குரியதாகும். முன்னரங்கின் இரு பக்கத்தையும் இணைக்கும் இரண்டு கறுப்புக் கயிறுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவ்விரண்டையும் ஓரடிக்கு ஒரு கயிறாக இணைத்துச் சிறைக்கூடத்தின் கம்பிகளைப் போலவும் அதன் நடுவே சிறைக்கூடத்தின் கதவையும் ஒரு மூலையில் சிலந்திவலையையும் உருவாக்கப்பட்டிருந்ததைப் பாராட்ட வேண்டும். இச்சிறைக்கூடத்தை உருவாக்கியவர் கூத்துப்பட்டறை நடிகர் ஆரா அஜித். இவரே சிறைக் கைதிகள், சிறை அதிகாரி, காவலரின் உடைகளையும் வடிவமைத்திருந்தார். ஆனால் ஓர் உறுத்தல்,  சிறைக் கைதிகளின் உடைகள் யாவும் தூய வெண்ணிறம் கொண்டவையாக உள்ளன. அவற்றில் கசங்கலோ அழுக்குக்கறையோ இல்லை. அவர்களின் கழுத்தில் பூட்டப்பட்ட வட்ட வளையத்திலிருந்து இரண்டு கைகளையும் கால்களையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலிகள் பிறந்த நாள் விழாவின்போது வீட்டறையில் கட்டித் தொங்கவிடப்படும் கம்பிக் கயிற்றினை ஒத்தவையாக உள்ளன. அதற்குப் பதிலாக இரும்புச் சங்கிலிகளையே பயன்படுத்தியிருக்கலாம்.

அலெக்சாந்தராக ஆரா அஜித், பெலூசினாக ராகுல், பெடரோவாக நிரஞ்சன், சிரோசாவாக நவீன் நிரஞ்சனா ஆகியோர் நாடகப் பாத்திரங்களாக உருமாறியிருந்தார்கள். சிறை அதிகாரியாக வரும் பிரியதர்ஷினி நடிப்பும் கம்பீரத் தோரணையும் பாராட்டும்படியாக இருந்தாலும் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ், வெண்ணிற முழங்கைச் சட்டை எல்லாமே Otto, Peter England  விற்பனைக் கூடங்களில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வரும் Modelling Dress பாணியை ஒத்திருந்தது. பார்வையாளர்களின் கண்ணுக்கு எடுப்பாக இருந்தாலும் எனக்கு என்னவோ தமிழ்த் திரைப்படங்களின் போலீஸ் அதிகாரியாக வரும் நயன்தாரா, தமன்னாவை நினைவூட்டும் வகையில் தோன்றியது. ரொட்டி விற்கும் பெண்ணாக, சீமாட்டியாக இரு வேடங்களில் தோன்றிய தேவி பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றார். அதேநேரத்தில் அவரது மகன், மதன் சிறைக் காவலாளியாக மிக இயல்பாக நடித்திருப்பதையும் சொல்ல வேண்டும்.

‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாடகத்தின் பின்னணி இசையை உருவாக்கிய அலெக்ஸ் பாராட்டிற்குரியவர். கைதிகளின் அவல வாழ்வின் பின்னாலுள்ள சோகத்தின் நினைவூட்டலாக இசையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இதனை ஒட்டி ஒளியமைப்புப் பற்றியும் சொல்ல வேண்டும். இரண்டு LED விளக்குகளைக் கொண்டு ஒளியமைப்பை உருவாக்கியிருப்பதில் பல பிரச்சினைகள். நடிகர்கள் பெரும்பாலும் இருளில் இருந்தனர். இரண்டு மஞ்சள் வண்ண ஒளியூட்ட ஒளியில் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பல இடங்களில் ஒளியமைப்பு இல்லாமல் கருந்திட்டுக்களாகவே அரங்கம் காட்சியளித்தது. ஒளி அமைப்பினை உருவாக்கியவர் விஜயராமன். கூத்துப்பட்டறையில் உள்ள ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்நாடகத்தின் இயக்குநர் வெளி ரங்கராஜன், பணியில் இருந்தபோதும் பணி ஓய்வு பெற்றபோதும் தொடர்ந்து நாடகத் தயாரிப்புகளில், இயக்க வேலைகளில் ஈடுபட்டுவருவது தமிழ் நாடகவுலகுக்கு அவர் ஆற்றும் மிகப் பெரும் பணி. தமிழ் நாடக வரலாற்றில், பத்து ஆண்டுகளாக என நினைக்கிறேன், அவர் நடத்தி வந்த நாடக வெளி சிற்றிதழ் தமிழ் வாசகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் நாடக இயக்குநர்கள், நடிகர்கள், ஆர்வலர்களுக்கான ஒரு கொடை. இச்சிற்றிதழ்கள் தொகுப்பாகக் கிடைக்கும் என நம்புகிறேன். வெளி ரங்கராஜனின் ‘நடுக்கடலில்’ நூல் உலக நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பாகும். இன்றும் முகநூல் பதிவுகளில் அவர் இயக்கத்தில் மேடையேறிய உலக நாடகங்களின் பதிவுகளைக் காணலாம்.

ஒத்திகையின்போது மட்டுமல்ல, அதன் பின்னரும் நடிகர்களோடு சமமாக உணவகங்களில் சாப்பிடும்போதும் தேநீர், காப்பி அருந்தும்போதும், இதர வேளைகளிலும் நாடகத் தயாரிப்புகள்பற்றி அவர் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்நாடகம் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் மத்தியிலும் மேடையேற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

                 மின்னஞ்சல்: craveendran43@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.