செப்டம்பர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வங்கத்தின் எழுச்சியும் எதேச்சாதிகாரத்தின் வீழ்ச்சியும்
      ஆங்கிலேயர்களை அதிரவைத்த ஆர்ப்பாட்டங்கள்
      உள்ஒதுக்கீடு: சமூக நீதியின் நீட்சி
      சண்டாளனும் பறையனும்: மொழியில் மிஞ்சும் அதிகாரம்
      இலக்கிய விழாக்கள் எதிர்கொள்ளும் யதார்த்தம் ஒரு தென்னிந்தியக் காட்சி
    • உரை
      எம்.ஏ. நு-ஃமான்: தீக்குள் இருந்தும் சிரிக்கலாம்
    • கதை
      கடுவன்களின் இரண்டாம் கதை
    • மேடை
      ஒளியமைப்பாளனின் மனப்பதிவுகள்
    • அஞ்சலி: முத்தம்மாள் பழனிசாமி (1933-2024)
      தலைமுறைகளின் பெரு வாழ்வு
    • தொடர்
      பா.ரா.சு.: சொற்களைத் தேடும் வேடன்
    • ஆவணப்படம்
      கலைவெளிப் பயணத்தின் பதிவுகள்
    • பதிவு
      வடக்கின் முதல் புத்தகக் காட்சி
    • திரை
      தங்கலான்: கலையும் அரசியலும் முயங்கும் களம்
    • விருது
      நாஞ்சில் நாடனுக்கு ‘கி.ரா. விருது’ - 2024
    • காலச்சுவடு 300--30: சக பயணிகளின் அனுபவங்கள்
      பயணத்தின் சுவடுகள்
    • மதிப்புரை
      துப்பறிவின் கச்சிதம்
    • கவிதைகள்
      திருவாலங்காடு
    • தலையங்கம்
      படுகொலைகள்: நீதியைக் கொல்லும் வழி
    • அறிமுகம்
      குடிப்பெயர்வின் துயரம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2024 மதிப்புரை துப்பறிவின் கச்சிதம்

துப்பறிவின் கச்சிதம்

மதிப்புரை
தி.அ. ஸ்ரீனிவாஸன்


ஒற்றன்

(நாவல்)

கோ. நடேசய்யர்

(ப-ர்): பெருமாள் சரவணகுமார்

 

வெளியீடு

மலைவாசம் பதிப்பகம்,

தொடர்புக்கு:

0094 766071062, 80981 91407

பக். 120

ரூ. 120

கடந்த நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில் தமிழில் பத்திரிகைகளின் எண்ணிக்கைப் பெருகி, தொடர்கதைகள் அவற்றில் வெளியாகத் தொடங்கியபோது நாவல் என்பதன் ஏகதேச வடிவம் மக்களிடையே அறிமுகமானது. தொடர்கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு தனிப்பட்ட நாவல்கள் எழுதி வெளியிடுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது. பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பெற்று, அதுசார்ந்த பணிகளில் இருந்தவர்கள்தான் இந்த முயற்சியில் இறங்கினார்கள். இந்தக் கதை வடிவம் நமக்கு அன்னியமானது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையிலும் புதினங்கள் நீள்கதைகளாகவே இருந்தன. எனவே கதையைச் சுவாரசியமாகச் சொல்வதுதான் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தின் அடியாகப் பிறந்தது துப்பறியும் நாவல் என்ற வகைமை.

ஒரு கொலை அல்லது கொள்ளை, இதன் பின்னணியிலுள்ள மர்ம முடிச்சு, இந்த முடிச்சை நீட்டிப்பதற்காகவும் வாசகரைக் கதையின் முடிவுவரை ஊகத்தில் வைத்திருப்பதற்காகவும் பின்னப்படும் தற்செயல் சம்பவங்கள் துணைக் கதாபாத்திரங்கள், மாண்டவர் திடீரென மீளுதல்,  மாறுவேடத்தில் பாத்திரங்கள் தோன்றுதல், முடிச்சு அவிழ்தல், தீயவர்கள் கைதுசெய்யப்படுதல் அல்லது மரணமடைதல்; இதுதான் பொதுவான கதைப் போக்கு. ஆரம்பகாலத்தில் துப்பறியும் நாவல்களைப் பலர் எழுதிப் பார்த்திருந்தாலும், இதில் வெற்றி பெற்றவர்களாக ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ராஜூ ஆகியோரைச் சொல்லலாம்.

இவர்களின் காலகட்டத்தில், 1915இல்,  வெளியான ‘ஒற்றன்’ நாவல், 107 ஆண்டுகளுக்குப் பிறகு(2022) மறுபதிப்பைக் கண்டிருக்கிறது. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தழிழ்த்துறை விரிவுரையாளர் பெருமாள் சரவணக்குமார் இப்புத்தகத்தைத் தேடிக் கண்டெடுத்துப் பதிப்பித்திருக்கிறார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் இதற்கு ஒரு அறிமுக உரை தந்திருக்கிறார். நடேசய்யர் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பைத் தந்திருக்கலாம்.

முதல்பதிப்பின் முகப்புப்பக்க ஒளிநகலில் அக்காலத்து வழக்கத்தையொட்டி, நாவலின் தலைப்பு ‘ஒற்றன் or Spy’ என்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உள்ளது.

தஞ்சாவூரில் பிறந்த கோ. நடேசய்யர்(1887-1947), தஞ்சை திரு.வி.க. கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் 1914இல் அங்கேயே வர்த்தகமித்ரன் என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். 1919இல் தென்னிந்திய வியாபாரிகள் சங்க விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற அவர், அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்துகொள்கிறார். பின்னர் 1920இல் நிரந்தரமாக இலங்கையில் குடியேறி, மரணம்வரையிலும் அத்தோட்டத் தொழிலாளர்கள் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்தார். தமிழில் தேசநேசன், தேசபக்தன், சுதந்திரன் ஆகிய இதழ்களையும் ஆங்கிலத்தில் தி சிட்டிசன், இண்டியன் எஸ்டேட் லேபரர் ஆகிய இதழ்களையும் தொடங்கியவர். வணிகவியல் துறை சார்ந்து சில நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘ஒற்றன்’ அவரது புனைவு முயற்சி.

 பிற துப்பறியும் நாவல்களிலிருந்து ஒற்றன் கருவிலும் களத்திலும் பாத்திரப் படைப்பிலும் முற்றிலும் வேறானது; தனிச்சிறப்பானது. ஆங்கிலத்தில் ‘எஸ்பியனிஜ்’ என்றழைக்கப்படுகிற, ஒரு நாட்டு அரசாங்கத்திற்காகப் பிறநாடுகளில் ஈடுபடும் உளவுவேலைதான் நாவலின் மையக்கரு. நாவலின் சம்பவங்கள் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கின்றன; பாத்திரங்கள் அனைவருமே வெளிநாட்டவர்கள். உளவும் இந்தியா தொடர்பானதல்ல.

முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் வியன்னாவில் ஆஸ்திரிய, ரஷ்ய, ஜெர்மன் சக்ரவர்த்திகளின் சந்திப்பு நிகழ்கிறது. அவர்களது ஆலோசனையின் ரகசிய குறிப்பைக் கடத்தும் நோக்குடன் பிரிட்டீஷ் ஒற்றர் ஒருவரும் அமெரிக்க ஒற்றர் ஒருவரும் காத்திருக்கிறார்கள். அந்த ரகசியக் குறிப்பு பிரிட்டீஷ் ஒற்றனிடம் பல இடையீடுகளுக்கிடையில் கடைசியில் வந்து சேர்கிறது. இதுதான் கதை.

இந்நாவலின் கரு மட்டுமல்ல, கதை சொல்லும் பாணியுமே வித்தியாசமானது. காட்சி வர்ணனை மிகக் குறைவு. கதாபாத்திரங்களின் தோற்ற வர்ணனை இல்லவே இல்லை. கதாபாத்திரங்கள் வெளிநாட்டவர்கள் என்பதாலோ என்னவோ, அக்காலகட்டத்து நாவல்களின் ‘நன்னெறி’ புகட்டும் இடையீடுகள் இல்லை.(கடைசியில் எவ்லின் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியில் மட்டும் நீதிநெறி கொஞ்சம் தலைகாட்டுகிறது!)  ’இப்போது இன்னார் என்னவானார் என்று பார்ப்போம்’ என்று கதையை வளர்க்கும் தேவையற்ற சம்பவங்கள் கிடையாது. விறுவிறுப்பு தொய்யாத கச்சிதத்தோடு நாவல் நகர்கிறது.

                        மின்னஞ்சல்: srinipotty66@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.