ஆம் ஆத்மி: தொண்டர்களும் தலைவர்களும்
1960களில் காங்கிரஸ் கட்சியின் ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வட இந்திய ஆதிக்கம் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்த திமுகவினரின் மேடைப் பேச்சுகளைக் கேட்டபோது, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சிறப்பான ஆட்சியைத் தருவார்கள் என்று நம்பினேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்பது பிற்காலத்தில் புரிந்தது என்று அப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த ஒருவர் எழுதியிருந்ததைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்க நேர்ந்தபோது ஒரு ஐ.ஏ..எஸ். அதிகாரி எப்படி திமுகவினர் வெற்று வாய்ச்சவடால்களை நம்பியிருக்க முடியும் என்று ஆச்சர்யப்பட்டேன். இருண்ட இந்திய அரசியல் வானில் ஒரு சிறிய ஒளிக்கீற்றாகத் தோன்றிய ஆம் ஆத்மி கட்சியினர் (ஆஆக) சமீபகாலமாகத் தந்துவரும் ஏமாற்றங்களைப் பார்க்கிறபோது அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி திமுகவினரை நம்பியிருப்பார் என்பது புரிகிறது.
‘ஊழலுக்கு எதிராக இந்த