கற்பனைப் பொன்னாவும் நிஜப் பொன்னாக்களும்
பெருமாள்முருகனின் மாதொரு பாகன் நாவலை முன்வைத்து எழுந்த சர்ச்சையின் காரணமாக, அதனை இணையம் வழி மின்நூலாகப் படிக்க நேர்ந்தது துரதிர்ஷ்டம். பெருமாள்முருகன் மீது தமது சுயநலங்களுக்காக ஒரு தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை, சமூகத்தில் குழந்தையில்லாத தம்பதியினரில் பெண்ணை மலடி என்றும் ஆணைக் கையாலாகாதவன் என்றும் எள்ளி நகையாடும் வன்முறைக்குச் சற்றும் குறைந்தது அல்ல.
ஒரு குறிப்பிட்ட சமூத்தினரை இந்த நாவல் இழிவு செய்கிறதென எடுத்துரைக்கப்படும் கூற்றை முற்றாக மறுக்க வேண்டியுள்ளது. அந்தப் பதினான்காம் நாள் திருவிழாவிற்குச் செல்லும் பொன்னா தனக்கான சாமியாக காளியையே தேடுகிறாள். அவள் சென்றுவிட்டாள் என்று தெரிந்த காளி கிட்டத்தட்ட இறந்து போகிறான்.
பொன்னாவையும் காளியையும் அப்படி முடிவெடுக்க வைத்தது அவர்கள் வாழும் சமூகமன்றி வேறு எது? க