முகாரியின் பரிணாமங்கள்
எந்தத் தாலாட்டுப் பாடலைக் கேட்டாலும் நான், இறந்து போய்விட்ட என் முத்தச்சியை
நினைத்துக் கொள்கிறேன். எல்லா
முத்தச்சிகளும் கதை சொல்லுபவர்கள்தாம். ஆனால் என் முத்தச்சி எனக்கு ஒரு கதைகூடச்
சொன்னதில்லை. நெற்றியில் முத்தமிட்டோ,
கட்டியணைத்தோ, பக்கத்தில் கிடத்தி உறங்கவைத்தோ அன்பைப் பரிமாறியதில்லை.
கட்டியணைத்தோ, பக்கத்தில் கிடத்தி உறங்கவைத்தோ அன்பைப் பரிமாறியதில்லை.
இப்படியெல்லாமிருந்தாலும் குழந்தைகளாக இருந்தபோது எங்களையெல்லாம் முத்தச்சி
தாலாட்டுப் பாடித் தூங்கவைப்பதைக்
கேட்டிருக்கிறேன்.
முத்தச்சி, சின்னம்மாவின் வீட்டில்தான் இருந்தார். என் அம்மா முத்தச்சியின் மூத்த
மகள். எனது மூத்த சகோதரிகளின் பிரசவ
காலங்களில்தான் பொதுவாக முத்தச்சி எங்கள் வீட்டுக்கு வருவார்.
நாங்கள் வீட்டில் பேசுவது தமிழில். எனவே முத்தச்சியை நாங்கள் பாட்டி என்றுதான்
அழைப்போம்.
அடர்ந்த நிறமுள்ள சேலை உடுத்துக்கொண்டு, நெற்