ஓங்கித் தமிழுலகு அளந்த உ.வே.சா.
சென்னை மாநிலக் கல்லூரியில் 25.2.2015 புதன் அன்று ப. சரவணன் பதிப்பித்த ‘சாமிநாதம் - உ.வே.சா. முன்னுரைகள்’ நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
பேரா. ஆ. இரா. வேங்கடாசலபதி தலைமையேற்க, ‘இலக்கிய வீதி’ இனியன் வரவேற்புரை வழங்கினார். முனைவர் த. பிரம்மானந்தப் பெருமாள் முன்னிலை வகிக்க முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி, பேரா. பா. ரா. சுப்பிரமணியன் ஆகியோர் உ.வே.சா.வின் பணிகள் பற்றியும் ப. சரவணனின் பதிப்புப் பணிகள் பற்றியும் கருத்துரை ஆற்றினர். ‘சாமிநாதம்’ நூலின் பதிப்பாசிரியர் ப. சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் உரையாற்றிய பக்தி இலக்கிய ஆய்வாளர் ஐ.கே.எஸ். சுப்பிரமணியம்:
“முன்னோடிப் பதிப்பாசிரியரான ஆறுமுக நாவலர், உ.வே.சா., சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரைப் பின்பற்றி சரவணன் தன் பதிப்புப் பணியை அமைத்துக்க