எங்கள் பார்வையில் காலச்சுவடு
கன்னியாகுமரியில் 25.12.2015 அன்று நடைபெற்ற ‘எங்கள் பார்வையில் காலச்சுவடு’ கலந்துரையாடலில் எழுதிச் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துகள்:
கே.எஸ். முகம்மத் ஷூஐப், காயல்பட்டினம்:
· அமரர் சுந்தர ராமசாமியின் ஆசிரியத்துவத்தில் முதலில் வெளிவந்த காலச்சுவடின் எட்டு இதழ்கள் எனக்கு கருப்பா சிவப்பா என்று தெரியாது. ஆனால் அன்னாரின் பொறுப்பில் 1991ஆம் ஆண்டில் வெளிவந்த காலச்சுவடு சிறப்பிதழ் முதல், இதோ இப்போதைய 180வது இதழ்வரை சில இதழ்கள் தவிர பிற எல்லா இதழ்களையும் வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழகத்தின் சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றை ஒருவர் அறிய விரும்பினால் கடந்த கால காலச்சுவடு இதழ்களைப் புரட்டினாலே போதும். தமிழகம், இந்தியா, உலகம் இம்மூன்றையும் சரிவிகித அளவில் பிரதிநிதித்துவம் படுத்தியிருக்கிறது காலச்சுவடு. நவீன இலக்கியம், கவிதை, சிறுகதை, விமர்சனக் குறிப்புகள், வெகுவாகக் கவனம்பெற்ற கட்டுரைகள், நேர்காணல்கள், விவாதங்கள், வாசகர் கடிதங்கள், சிறப்பான தலையங்கங்கள், பத்திகள் என்று இவை எதையும் விடவில்லை. காலச்சுவடு எல்லாவற்றிலும் தனி முத