திருக்குறண்டி
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாகக் கிடைக்கும் சமணத் தடயங்களால் தமிழகத்தின்
பிற பகுதிகள் போன்று இங்கும்
சமணம் மிகப் பொலிவுடன் விளங்கியது தெளிவுபடுகிறது. குறிப்பாகத் திருக்கோட்டாற்று
நாகராஜாகோயில், திருச்சாரணத்துமலை
(சிதரால்), குரத்தியறை, திருநந்திக்கரை குடைவரைக் கோவில், சிவகிரி (ஆழ்வார் கோவில்),
குறண்டி, பள்ளிக்கல், பள்ளியாடி,
பூதப்பாண்டி, துவரங்காடு, திற்பரப்பு, மருந்துவாழ்மலை, மலையடி, தேவேந்திரன் பொத்தை,
வௌவால்குகை, வேளிமலை,
பார்த்தவசேகரபுரம் கோட்டவிளை ஊர், கோட்டாறு, புத்தேரி, முப்பந்தல் ஆகிய ஊர்கள்
மற்றும் கோயில்கள் பற்றிய செய்திகள் பல
சமணத்துடன் இணைகின்றன. இந்திரன் சமணத்தில் மதிப்புக்குரியவன், தேவர்களின் அரசன்.
இந்திரன் வாய்க்கால், மகேந்திரகிரி, சுசி -இந்திரம் (சுசிந்திரம்), இந்திரன் பொத்தை என அவன் பெயரிலும் அதுபோன்று அவன் மகன்
ஜெயந்தன்/சேந்தன் பெயரிலும் பல
இடங்களும் கோயில்களும் குமரிமாவட்டத்தில் காணப்படுகின்றன. இம்மாவட்டத்தில்
கிடைக்கப்பெற்ற அனேகக் கல்வெட்டுகளில்
அரசர்கள் நிவந்தமாக நிலங்களை அளித்தபோது ‘பள்ளிச்சந்தம் நீக்கி’ எனப் பயன்படுத்தும்
சொற்றொ