கவிதைகள்
பிறைநிலாவின் புகைப்படக்கருவி
அவளது புகைப்படக்கருவி
ஒரு பேரலையைப் போலவேயிருக்கின்றது.
பெருமழையின் சிறுதுளிகளைப்
பெரும் விருட்சங்களைப் போலாக்கிவிடுகின்றாள்.
உதிரிலைகள்
அவளிடத்தில் மலைகளாகிவிடுகின்றன.
அவளது புகைப்படக் கருவியில்
சிக்கிய முகங்களில் ஏதாவதொன்றிலாவது
தாள்கள் படபடக்க
ஒரு புத்தகம் நிச்சயமாக இருக்கும்.
யாராவது அதைப்
புத்தகத்தைப் படிப்பதுபோலப் படித்துவிடமுடியாது.
ஏனெனில்
சுதாகர் சொன்னதைப்போல
‘புத்தகங்களிலிருந்துதான் வாழ்வு தொடங்குகிறது.’
பெரும் விவாதத்துக்கும் பின்னரான
பொழுதுகளில்
தேநீரைப் பருகிக்கொண்டு
அவளது புகைப்படங்களை
நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்களானால்
அவற்றில்
வ