அற்புதம்
அற்புதம்
தம்பு (1948)
ஒளிப்பதிவாளர் வேணு வாயிலாகத்தான் நெடுமுடி வேணுவுக்கு நான் அறிமுகமானேன். ‘அவனவன் கடம்ப’ என்ற நாடகத்தின் பயிற்சி முகாமில் நாங்கள் மூவரும் ஆளில்லாத இடம்பார்த்து அந்த இரவில் ரகசியமாக ‘ஆனந்த’த்தைப் பகிர்ந்துகொண்டோம். பின்னர் நாங்கள் பார்த்துக்கொண்டது ‘சார்லி’ என்ற சினிமா தொடர்பாகத்தான். (இந்தப் படம் ‘மாறா’ என்ற பெயரில் தமிழில் அண்மையில் வெளியானது.) அன்று வேணு சேட்டன் முன்னுரை எதுவும் தேவையில்லாமல் என்னை நினைவுகூர்ந்ததும் அந்த ‘அவனவன் கடம்ப’ இரவின் ஆனந்தத்துடன்தான். சார்லி படப்பிடிப்பு இரவுகளிலும் அது தொடர்ந்தது. நாங்கள் அதிகம் உரையாட