கனா
கனா
இறந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்? முதலில் கனா என்பது என்ன? அது எங்கிருந்து வருகிறது? உறங்கும்போது நாம் உண்மையில் என்னவாகிறோம்? நாமறியாது நம்முடைய ஆன்மா ஒரு பட்டாம்பூச்சி போல் நம் உடலிலிருந்து பறந்து வெளியில் உலவிவிட்டு வருவதைத்தான் நாம் கனவு என்கிறோமா? கனவுகளால் நம்மைப் பைத்தியமாக்கவோ கொல்லவோ முடியுமா? கனவென்பது நம் இருத்தலின் மற்றொரு பரிணாமமா? இறந்துபோனவர்கள் எப்படி கனவில் உயிர்பெற்றுவிடுகிறார்கள்? நாம் இறந்துபோகிறபோது நம்முடைய கனவில் வாழ்கிறவர்கள் எங்கே போவார்கள்? நம்முடைய இருப்பையே நாம் ஒரு கனவாக மாற்றிவிட முடியுமா?
என்னுடைய இரவுகளைக் கனவுகளே முழுவதுமாய் ஆக்ரமித்து இருக்கின்