அறிப்படாத ஆஃப்கானிஸ்தான்
பாமீயன் பௌத்த சிலை
ரவீந்திரநாத் தாகூரின் ‘காபுலிவாலா’ சிறுகதையைப் படித்தபோதுதான் ஆஃப்கானிஸ்தான் என்று ஒரு நாடு இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். நான் கல்லூரியில் படித்த நாட்களில் தாகூரின் இந்தச் சிறுகதை ஆங்கில இலக்கியப் பாடமாக இருந்தது. இது காபூலிலிருந்து கொல்கத்தாவிற்கு உலர்ந்த பழங்கள் விற்கவந்த வயதான ஓர் இஸ்லாமியருக்கும் ஒரு வங்காள இந்துச் சிறுமிக்குமிடையே ஏற்பட்ட மென்மையான ஆன்மநேயத் தொடர்பு பற்றியது. படித்த வர்களின் உள்ளத்தை உலுக்கும் படைப்பு. தாகூர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்தக் கதை எழுதியிருக்க வாய்ப்பில்லை. இது ‘லவ் ஜிகாது&rsquo