மார்ச் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேங்கை வயல் அவமானம் நீளும் மௌனங்கள், சுருங்கும் உரையாடல்கள்
      தெருவிலே விட்டுவிட்டார் ராகுல்
      கானல் நீராகவே இருக்கும் கருத்துச் சுதந்திரம்
      ஒரு குறள், இரு குரல்கள்
      பின்னை மானுட யுகத்தின் தொடக்கம்
      நொய்யல்: தெளிவின்மையின் மெய்யறிவு
      கூடுவிட்டுக் கூடுபாயும் இலக்கிய வித்தைக்காரர்
    • கதை
      கண்டடைதல்
    • மறுமொழி
      தீண்டாமை யாத்திரையில் தொடர்ந்த உரையாடல்கள்
    • பதிவுகள்
      பன்னாட்டுப் புத்தகச் சந்தையும் பாடநூல் கழகமும்
    • பாரதியியல்
      வேத ரிஷிகளின் கவிதை மூலமும் காலமும்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      சாப்பிட்ட தட்டு
    • தொடர் 80+
      காத்திருக்கும் படைப்பாளி
    • திரை
      யதார்த்தத்திலிருந்து எழும் ஆன்மீக அனுபவம்
    • கடிதங்கள்
      கல்வியாளுமையும் மானுட ஆளுமையும்
    • மதிப்புரை
      அனுபவத்திலிருந்து சிறிது வெளிச்சம்
    • தலையங்கம்
      தமிழர் இனவாதம்
    • கவிதை
      அன்பில் சிறிய பாதைகள்
      ஆயிரத்து மூன்று இரவுகளை எழுதிப் பார்க்கும் ஒருவன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2023 கவிதை அன்பில் சிறிய பாதைகள்

அன்பில் சிறிய பாதைகள்

கவிதை
ஜீவன் பென்னி

ஓவியம்: மு. நடேஷ்

 

1.

ஒரு ஆடையை வரைகிறேன்!

எப்போதும் போல் அது உனக்கு சிறியதாகயிருக்கிறது.

கூர்மையான ஒரு சொல்லின் தீண்டல் போல்

நீ சிரிக்கப் பழகியிருக்கிறாய்.

ஒரு உடலை வரைகிறேன்!

முன்னெப்போதும் போலில்லாமலது

உன் ஆன்மாவிற்கு மிகப் பொருத்தமாக அமைந்து

விடுகிறது.

சிறு விரல்களில் தொட்டுணரும் புண்ணொன்றிற்கான

ஆறுதலை நீ சொல்லிக்கொண்டிருந்தாய்.

ஒரு உலகை வரைகிறேன்!

கைவிடப்பட்டவர்களோடு நீ திரிந்தலைவதற்கு

அது போதுமானதாகயிருக்கிறது.

கைகளால் பின்னிய ஒரு துணியின் பிரியத்தை

அப்பொழுது நீ நூல்நூலாகப் பிரித்துக்கொண்டிருந்தாய்.

*

2.

காயத்தொடங்கும் உடலை மூடுவதற்கென

மணலைக் கொண்டுவரும் கைகளுக்கிடையில்,

அவ்வுடல் சுவாசிப்பதற்கென

சிறுசிறு சன்னல்களை அடுக்கிவரும்

பிஞ்சுக்கைகளை அப்போது நான் கவனித்தேன்.

அதற்கு வேறெதுவும் தெரியவில்லை.

புதைமேட்டின் கடைசிப் பிரார்த்தனைக்கு நடுவே

தான் சுமந்து வந்தவைகளை விட்டுவிட்டு

அது நகரத் தொடங்கியது.

இதற்கு மேல் இங்கு ஒன்றுமிருப்பதில்லை.

எப்போதும் திடீரென முடிந்து போகக்கூடியவை!

அன்பின் இந்தச் சிறிய பாதைகள்.

3.

பேரன்பின் ஒரு துளியினைச் சிமிழியினுள் பொதித்து

மிகக் கவனமாக எல்லோரின் கைகளுக்கும்

விநியோகித்துக்கொண்டிருந்தவள்,

ஒருமுறை அதைத் தவறவிட்டுப் பார்க்கிறாள்.

ரகசியம் உடைந்த அத்தருணத்தில்

பிரபஞ்சத்தில் எதுவும் மாறியிருக்கவில்லை.

உடைந்த ஆயிரமாயிரம் சில்களில்

தெரிந்திடும் துக்கத்தை மறைத்து

நீட்டப்பட்ட பல்லாயிரம் கைகளுக்குக் கொடுத்தனுப்புகிறாள்.

அப்பொழுதும் பிரபஞ்சத்தில் எதுவும் மாறவில்லை.

அன்பை உடைத்துப் பார்ப்பதென்பது

அது சிதையும் துக்கத்தைப் பார்ப்பதுதான்.

4.

கேன்வாசில் உதிர்ந்திடும் இலைகளைச் சேகரிப்பவன்

உலர்ந்த தன்னிதயத்தில் அவற்றை நிரப்பிப் பார்க்கிறான்.

சீழ் நிறைந்த கொப்புளங்களை அவன் இப்படித்தான்

மறைத்துக் கொள்கிறான்.

அதிசயங்களை வரவேற்றிடும்

உலகின் பார்வையாளர்கள்

அச்சிறிய பிறழ்வைக் கண்டு பீதியடைகின்றனர்.

இனிப்புக் கட்டியைப் போலானச் சொற்களைக் கொண்டு

இப்பூமியின் வழியெங்கும்

அலங்கரிக்கப் போவதாக அவன் சொன்னபோது

அரங்கம் ஒருமுறை சலித்து அடங்கியது.

இறுகிய முடிச்சுகள் நிறைந்த தன்னை அவிழ்த்து

எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் பாவனையில்

ஒன்றைச் செய்து காட்ட முற்பட்டபோதுதான்

கூட்டம் அவனை முழுவதுமாக வெளியேற்றியது.

*

5.

பற்றிக்கொண்டிருக்கும் கைகளை அவன் ஒவ்வொன்றாக

விடுவித்துக்கொண்டபோது

அவனிடமிருந்தது,

நெடிய வாசம் வீசும் மலரின் இதழொன்றும்

சன்னமான வலி நிரம்பிய கீறலொன்றும்தான்.

இதழைக் கீறலினுள் வைத்துத் தைத்து முடித்தான்.

 

பிரிவுக்கானச் சொல்லொன்றை தேடிக்கொண்டிருந்தபோது

அவனிடமிருந்தது,

ஒரு கூர்மையான ஆயுதமும்

ஒரு இறுக்கமான அணைப்பின் கதகதப்பும்தான்.

எப்போதும் கடைசியில் மிஞ்சும்

ஒன்றுக்கு மேற்பட்டவைகளைக்

கையில் வைத்திருக்கும் தன்னிலையை

அவன் வெறுக்கத் தொடங்கியிருந்தான்.

 

6.

திரும்பும் வழியில் அவனைப் பார்க்க நேர்ந்தபோது

கொஞ்சம் என்னை மாற்றிக்காண்பித்தேன்.

அவன் நம்பமுடியாமல் என் கண்களையே

வெறித்தபடியிருந்தான்.

அசௌகரியத்தில் மாற்றிக்கொள்ளக் கூடியதான

வாழ்வொன்றை

அவன் ஏனின்னும் தேர்ந்தெடுக்கவில்லை?

அவனைக் கடந்து வெகு தூரம் சென்று திரும்பிப் பார்க்கையில்,

நான் கழற்றிக் கொடுத்த முகத்தினை

கைகளில் வைத்துப் பார்த்தபடியேயிருந்தான்.

மீண்டும் மீண்டும் தனக்குத் தெரிந்த முகங்களின் சாயலைப்

பார்க்க நேரும்போதெல்லாம்

வலிகளைச் சிரிப்பில் கடந்துசெல்லும் வாழ்வொன்றைப்பற்றிக்

கத்திக்கொண்டிருந்தான்.

 

 மின்னஞ்சல்: jeevanbenniepoems@gmail.com

 

 

 

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.