மார்ச் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேங்கை வயல் அவமானம் நீளும் மௌனங்கள், சுருங்கும் உரையாடல்கள்
      தெருவிலே விட்டுவிட்டார் ராகுல்
      கானல் நீராகவே இருக்கும் கருத்துச் சுதந்திரம்
      ஒரு குறள், இரு குரல்கள்
      பின்னை மானுட யுகத்தின் தொடக்கம்
      நொய்யல்: தெளிவின்மையின் மெய்யறிவு
      கூடுவிட்டுக் கூடுபாயும் இலக்கிய வித்தைக்காரர்
    • கதை
      கண்டடைதல்
    • மறுமொழி
      தீண்டாமை யாத்திரையில் தொடர்ந்த உரையாடல்கள்
    • பதிவுகள்
      பன்னாட்டுப் புத்தகச் சந்தையும் பாடநூல் கழகமும்
    • பாரதியியல்
      வேத ரிஷிகளின் கவிதை மூலமும் காலமும்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      சாப்பிட்ட தட்டு
    • தொடர் 80+
      காத்திருக்கும் படைப்பாளி
    • திரை
      யதார்த்தத்திலிருந்து எழும் ஆன்மீக அனுபவம்
    • கடிதங்கள்
      கல்வியாளுமையும் மானுட ஆளுமையும்
    • மதிப்புரை
      அனுபவத்திலிருந்து சிறிது வெளிச்சம்
    • தலையங்கம்
      தமிழர் இனவாதம்
    • கவிதை
      அன்பில் சிறிய பாதைகள்
      ஆயிரத்து மூன்று இரவுகளை எழுதிப் பார்க்கும் ஒருவன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2023 கடிதங்கள் கல்வியாளுமையும் மானுட ஆளுமையும்

கல்வியாளுமையும் மானுட ஆளுமையும்

கடிதங்கள்

‘

‘இலக்கியவாதியின் மொழியியல்’ பயணம் எனும் பேராசிரியர் இரா. அறவேந்தனின் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அது மொழியியல் பேராசிரியர் சு. இராசாராம் பற்றியதாயிருப்பதால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டிய கடமையை நான் உணர்ந்து எழுதுகிறேன்.

நான் எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவரிடம் நான் கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் பணிபுரிந்தவன். இரண்டு, என்னுடைய இன்றைய வாழ்வு வரை அவரின் வழிகாட்டல். எனவே என்னுடைய மனவுணர்வுகளையும் பேராசிரியர் குறித்து இத்தருணத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒருபோதும் தன்னைப் பேராசிரியர் என்று காட்டிக்கொண்டதில்லை. தனக்குக் கீழ்ப் பணிபுரிபவர்களிடம் ஒரு சிறு சொல்கூடக் கடிந்து பேசியதில்லை. அதிகபட்சக் கோபமாக அவர் பேசாமல் இருப்பார். என்ன இப்படிச் செய்துள்ளீர்கள், வேறு செய்து வாருங்கள் என்பார்.  உபசரிப்பில் பாரபட்சம் காட்டமாட்டார். வாருங்கள் சாப்பிடலாம் என்றே அழைத்துப்போவார். நீ, வா என்று ஒருமையில் யாரையும் அழைக்கமாட்டார். பணிசெய்து கொண்டேயிருப்பார்; எழுதிக்கொண்டேயிருப்பார். யாரேனும் துன்பப்படுகிறார்களென்றால் தன்னால் முடிந்ததை உடனே செய்வார். ஆனால் காட்டிக்கொள்ளமாட்டார்.

அவரிடம் பணியாற்றிய காலத்தில் நான் முனைவர் பட்ட ஆய்வாளராக வேறொரு பேராசிரியரிடம் இருந்தேன். ஆய்வு தொடர்பாக எது கேட்டாலும் ஆழமாக அதேசமயம் எளிமையாகக் கூறுவார். ஒரு சமயம் அயல்நாட்டு மலரொன்றிற்கு அவரிடம் கட்டுரை கேட்டபோது என்னை அழைத்து நீங்களும் ஒரு கட்டுரை தாருங்கள் என்று கேட்டு வாங்கிப் பிரசுரிக்க வைத்தார்.

அவர் மேசையெங்கும் தாள்கள், அலுவலக ஆணைகள், அறிக்கைகள் எல்லாமும் இறைந்துகிடக்கும். அதற்கிடையில் அவர் எழுதிக்கொண்டேயிருப்பார். தேவையானவற்றைச் சரியாக அக்குவியலிலிருந்து எடுத்துப் பதிலுரைப்பார்; எதையும் மறக்கமாட்டார். அவரின் ஒலியியல் எனும் நூல்தான் நான் முதலில் வாசித்தது. மிக எளிமையான நூல். தெளிவான நடை கொண்டது. ஆனால் ஆழமாக விவாதங்களையும் கருத்துகளையும் வைத்திருப்பார்.

மொழிப்புல அரங்கில் ஏதேனும் சொற்பொழிவு நிகழ்ந்தால் என்னை அழைத்துப்போய்க் கேட்டு வாருங்கள் என்பார். இளநிலை உதவியாளர் என்பதைத் தாண்டி ஆய்வாளராக என்னை மதித்தவர்.முதுநிலைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்க அமைப்புச் செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர் பேராசிரியர்; எந்தவொரு பொறுப்பினின்றும் விலகாதவர். அதேசமயம் பரபரப்பின்றிச் செயல்படுவார். திட்டமிடல் தெளிவாக இருக்கும். மனத்துள்ளிருந்து செயல்பாடுகள் குறித்து வகுத்துப் பிரித்து அதனை எங்களுக்கு வழங்கிச் செய்யவைப்பார். தேநீர் இடைவேளைகளிலும் எங்களுடன் அருந்துகையில் செயல்பாடுகளின் திட்டமிடல்களைப் பகிர்ந்துகொள்வார். ஆய்வாளர்களுக்கு வழிகாட்டல்கள் நடந்துகொண்டேயிருக்கும். அவர்கள் எழுதும் ஆய்வேட்டு இயல்களையும் உடனுக்குடன் திருத்திக்கொடுத்து ஆலோசனைகள் நல்குவார்.

நான் அலுவல்நிலைப் பணியிலிருந்து கல்விநிலைப் பணிக்காக மாறிய உபசரிப்பு விழாவில் என்னைப்போல ஒருவர் பணி செய்ய முடியாது என்று கூறினார். இது எனக்குக் கிடைத்த பெரிய விருது. எத்தனை பேர் வந்தாலும் அன்பழகன்போல வேலை செய்ய முடியாது என்று பாராட்டுச் சான்றிதழ் அளித்தவர்.

இன்றுவரை நான் ஒரு நல்ல கல்வியாளன் என்று பேராசிரியர்களும்  மாணவர்களும் பாராட்டும் நிலையில் இருந்து பணியோய்வு பெற்றாலும் இதற்கெல்லாம் வழிகாட்டியவர்,  சு.இராசாராம்.

மொழியியல், இலக்கணம் சார்ந்த அவரின் ஆய்வுகள் பரந்துபட்ட தளத்தில் பல்வேறு ஆக்கங்களை மொழிக்குத் தந்துகொண்டிருப்பவை.

வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, ஒலியியல், பெடகாகிகல் அகராதிகள், ஜெர்மானிய அகராதிகள் என அவரின் ஆய்வு நூல்களில் அவர் எடுத்துரைக்கும் ஆய்வுக் கருத்துகள் மொழியியல் கற்றவர்க்கு ஆர்வங்குன்றாத அனைவருக்கும் நிறைய மேலாய்வுக் களங்களை விரித்துக் கொடுப்பவை. அவரின் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொண்டு முடித்துள்ள மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும் தனித்துவமிக்கவை.

இன்றும் ஆய்வாளராக, கல்வியாளராக, படைப்பாளியாக இயங்கும் என்னுடைய வாழ்வில் பேரா. சு. இராசாராம் ஒரு கைவிளக்கு. வழிகாட்டும் திசை விளக்கு என்றால் அது புகழ்ச்சியில்லை, உணர்ந்த சத்திய உண்மை.

க. அன்பழகன் (ஹரணி)

அண்ணாமலை நகர்

அண்மையில் U.K. சென்று கடந்த வாரம் திரும்பினேன். உடனே காலச்சுவடு இதழ்களைப் படிக்கத் தொடங்கினேன். தற்போது ஜனவரி 2023 இதழைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சிறப்புப் பகுதியான ‘இன்றும் காந்தி’ கட்டுரைகளைப் படித்து வருகிறேன். காந்திஜியின் பல்வகைப்பட்ட போராட்டங்கள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் அவ்வவ் துறை
அறிஞர்களைக் கொண்டு அருமையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு, காந்தியச் சிந்தனைகள் என்றும் நிலையானவை, பின்பற்ற வேண்டியவை என்பதனைத் தெளிவாகத் தொகுத்துள்ளீர்கள். அருமையான பணி. அனைத்து நூலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இவற்றைப் பயன்படுத்தினால் இன்றைய தலைமுறைக்குக் காந்திஜியின் அரும்பணிகள் சென்று சேரும்.

குறிப்பாக நமது தலித் சகோதரர்கள் எல்லாமே அம்பேத்கர் என்ற கருத்தி யலிலிருந்து காந்திஜியின் தீண்டாமை ஒழிப்புப் பணியின் மேன்மையை உணரச் செய்யும் வண்ணம் ‘இன்றும் காந்தி’ அமைந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ‘M.A. Gandhian Thoughtt’ பயின்று பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளேன். அதன் பாடப் பகுதிகளைவிட இத்தொகுப்பு சிறப்பானது என்பது எனது உறுதியான கருத்து. தங்களின் இலக்கியப் பணி, காந்தியச் சிந்தனை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

கே. வைத்யநடேஷ்வரன்

நெய்வேலி

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.