ஜெயலலிதா அரசியல் முன்மாதிரியா?
அம்மு என்ற பெண் மாநிலத்தின் அம்மா வாக மாறிய சரித்திரம் அத்தனை எளிதானதல்ல. ஜெயலலிதாவின் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றிய ஆவணம், வாரப் பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு தொடர். அதில் தயக்கமின்றி உண்மைகளை எழுதுகிறார் என்ற காரணத்திற்காக அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டது.
மைசூர் மகாராஜாவின் மருத்துவரான தாத்தாவின் சொத்துக்களைக் குடித்தழித்த வக்கீல் தந்தையின் உயிரற்ற உடல்தான் தன் முதல் ஞாபகம் என்று குறிப்பிடுகிறார் ஜெயா. குடும்பத்தைக் காப்பாற்ற அலுவலகச் செயலாளராகப் பணிபுரிந்தார் தாய் வேதவல்லி. அவருடைய அழகிய தோற்றத்தைப் பார்த்து வந்த திரைப்பட வாய்ப்புகள் அவர் பெயரை சந்தியா என மாற்றிச் சென்னையை நோக்கிக் குடிபெயர வைத்தன. அந்தப் பிஞ்சு வயதில் தாய்ப் பாசத்திற்காக ஏங்கிய குழந்தையாகவே இருந்திருக்கிறார் ஜெயா. சிறிது காலத்திற்குப்