சல்மா
சமன்
ஒரு நாளைவிட மற்றொரு நாள்
ஒரு வருத்தத்துக்கு மாற்றாய்
வேறொரு வருத்தம்
ஒரு துரோகத்திற்கு மாற்றாய்
வேறொரு துரோகம்
ஒரு துக்கத்திலிருந்து வெளியேற
வேறொரு துக்கம்
என சமன் செய்கிற
வாழ்வு
என்றுணர்கையில்
அவமானம் பிடுங்கித் தின்கிறது
ஒரு நாளின் மீது
மற்றொரு நாள்
புழுவைப் போல தடயங்களின்றி
சத்தமின்றி ஊர்ந்து செல்கிறது
காலத்தின் மீது படிந்து
கிடக்கிற ஒட்டடைகளை
சற்று கலைத்து விடு
கடும் தும்மலுக்கு இடையில்
இந்த நாள் விடியட்டும்.
-------------------------------
தனிமை
அரவமற்ற தெருவிலிருந்து
நான் அழைத்து வந்த
தனிமையின் ஒரு துண்