நெய்தல் விருதுகள்
‘நெய்தல்’ வழங்கும் சுரா இலக்கிய விருதுக்கு இது பத்தாவது ஆண்டு. தமிழின் இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருது தமிழகத்தின் கவனத்திற்குரியதாக இருந்துவருகிறது. 2015ஆம் ஆண்டின் சுரா விருதுக்கு சமஸ் தேர்வாகியிருந்தார்; 2016ஆம் ஆண்டு விருதுக்குரியவர் கே.என்.செந்தில். ராஜமார்த்தாண்டன் பெயரில் முதல் கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படும் 2016ஆம் ஆண்டு விருதினை ‘நீர்ச்சாரி’ தொகுப்புக்காக பத்மபாரதி பெற்றார்.
டிசம்பர் 3ஆம் தேதி இவ்விருதுகள் சென்னை உமாபதி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்கான விருதை இவ்விழாவில் சமஸ்-க்கு வழங்கி உரை ஆற்றினார் ஆ.இரா. வேங்கடாசலபதி. தன் கருத்துகளை வெளியுலகுக்கு அறியத் தருவதில் சமஸ் சமரசமற்ற எழுத்துப்போராளியாகத் திகழ்வதை சலபதி சுட்டினார். பெரும் பல்கலைக்கழகப் பட்டங்களோ ஆங்