விலங்குகளின் அணிவகுப்பு
பர்கூர் மலைக்கிராமம். ஈரோடு - அந்தியூரிலிருந்து முப்பத்தியொரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கு சிறுத்தைகளும் யானைகளும் வீட்டு மிருகங்களைப்போல் உல வும் காட்டின் அடிவாரத்தில் இருக்கிறது இயற்பியல் பேராசிரியர் பாஸ்கரனின் வீடு. தெற்கு திசை நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலைக் கூட்டங்களைப் பார்த்திருந்த வீட்டின் வடக்குத் திசையில் மதில் சுவரை ஒட்டி யானை அகழி வெட்டப்பட்டி ருந்தது. இதைத் தவிர்த்து விலங்குகளின் எதிர்பாரா வருகையை ஒட்டி 10,000 வோல்ட் DC மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் ஒரு சாண் இடைவெளியில் பன்னிரண்டு அடி உயரத்திற்கு வீட்டைச் சுற்றிலும் பின்னப்பட்டிருந்தன. வீட்டின் பின்னால் குலை தள்ளிய வாழைமரங்களும் ரோஜாத் தோட்டங்களும் இருந்தன.
பர்கூருக்குள் நுழைந்தபோது மலைக்க வைக்கும் அளவில் உயர்ந்தும் முடிவற்றும் இருந்த மலைக்காடுகளின் தொடர்ச்சியால்