அதிநாயக ஜயஹே
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கருதப்படும் மக்கள் மன்றம். நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்கு அமைப்புகள் மீதும் குடிமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொய்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புகள் அவற்றின் ஆதாரமான குறிக்கோள்களிலிருந்து விலகியவையாகவும் செயல்பாடுகளில் முறைகேடுகள் நிரம்பப் பெற்றவையாகவும் மாறியிருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவற்றுள் ஒப்பீட்டளவில் மக்களின் நம்பிக்கைக்கு ஓரளவேனும் பாத்திரமாக இருப்பது நீதித் துறை. ஆனால், நீதித் துறை அண்மைக் காலங்களில் பிறப்பிக்கும் ஆணைகள் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இந்தியக் குடிமக்களின் சமாதான சக வாழ்வு இடையூறு இல்லாமல் முன்செல்ல உதவும் வகையில் சட்டங்களை வலியுறுத்துவது நீதிமன்றத்தின் கடமை. அதன் வாயிலாக எல்லாருக்கும் பாரபட்சமற்ற நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
சில சமயங்கள