சுகுமாரனுக்கு இயல் விருது - 2016
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், தமிழ் வார இதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், என பன்முகத் திறனுடன் இயங்கிக்கொண்டிருப்பவர். சுகுமாரன், இந்த விருதைப் பெறும் 18ஆவது தமிழ் ஆளுமை.
இதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன் ஆகியோர் இயல் விருதைப் பெற்றுள்ளனர்.
சுகுமாரன் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், புதினங்கள், முன்னுரைகள் மூலமாகப் பங்களிப்புகள் செய்துள்ள