கனல் வட்டம் -வெளியீடு
காலச்சுவடு வெளியீடான கல்யாணராமனின் ‘கனல் வட்டம் - ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்’ என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு ஆத்மாநாம் படித்த ஞி.நி. வைஷ்ணவா கல்லூரியில் பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்பபடுத்தி வைஷ்ணவா கல்லூரி பேராசிரியர் பிரேமா விழாவைத் தொடங்கி வைத்தார்.
முதல் பிரதியைக் கவிஞர் ஆனந்த் வெளியிட, பெருமாள்முருகன் பெற்றுக்கொண்டார். ஆத்மாநாமுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் ஒன்றாகச் சுற்றியதையும் இலக்கியம் குறித்து உரையாடியதையும் சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட இன்னல்களையும் விரிவாகவே ஆனந்த் பகிர்ந்துகொண்டார். இந்நூல் உருவாக்கத்தில் கல்யாணராமன் செலுத்திய உழைப்பு மற்றும் ஆர்வம் குறித்து சுருக்கமாகப் பெருமாள்முருகன் பேசினார்.
ஆத்மாநாமின் 156 கவிதைகளை -இதுவரையி