முழுக்கவிதைத் தொகுப்பு வெளியீடு
கலை, இலக்கியம், இசை, நாடகம், வரலாறு, மாற்று சினிமா உள்ளிட்ட பல துறை சார்ந்த நவீன முன்னெடுப்புக்காக, பிரக்ருதி அறக்கட்டளையை 1998ஆம் ஆண்டு ரன்வீர் ஷா தொடங்கினார். இந்தியப் பிராந்திய மொழியின் நவீன ஆளுமைகள் துவங்கி, ஆசிய ஐரோப்பிய நாடுகளின் வரை பல மொழி, பல கலாச்சார ஆளுமைகளை வரவழைத்து வாசகர்களுடன் சந்திக்கச் செய்கிறார்கள். குறிப்பாக நவீன கவிதை சார்ந்தும், நவீன நாடகம் சார்ந்தும் இவர்களது கவனம் குவிகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இருவாரக் கலை விழாவாக இதனை நடத்திக்கொண்டு வருகிறார்கள். கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று பெருமாள்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஒவ்வொரு வருடமும் பெசண்ட் நகர் ஸ்பேசிஸ் அரங்கில் இக்கலை விழா ஏற்பாடாகிறது.
நிகழ்வில் ‘மயானத்தில் நிற்கும் மரம்’ - இதுவரையிலான பெருமாள்முருகனின் கவிதைகள் முழுத