அநாதைகளின் அமரகாவியங்கள்
பாடகன் ஆகிவிட வேண்டுமென்பது என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே அதைத்தான் கனவு கண்டுகொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக் குரலும் பொருந்தவில்லை என்றாலும் எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என முன்பே அறிந்துகொண்டேன். முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் எனக்கு நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டுமே இளையராஜா போன்று கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளைச் செருகி எடுத்தபோதும் இந்த நோயை குணமாக்கக் கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்குப் பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும், மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால், இந்நூல் எனக்கு என்னை ஒத்த ஜீவன்களின் கதைகளைப் பேசுகிறது.
நானும் சாதாரண கலைஞனல்ல. எட்டாவது படிக்கும் போதே “டவுசர் விறைக்க, கைகளைக் கட்டிக்கொண்டு “இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை... நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை...” என்று பாடி அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய