இன்குலாபும் காந்தள் மலர்களும்
வண்டலூர் வங்கி ஒன்றின் காத்திருப்போர் வரிசையில்தான் நான் இன்குலாபை முதன் முதலாகச் சந்தித்தேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இருக்கும். நல்ல புழுக்கம். வெளியே வெயில். வந்த வேலை முடிந்தது. வங்கிக்கு வெளியே சிறு மர நிழலில் நின்றபடி பேசினோம்.
பின்னோக்கி வாரிய சிகை. குறுஞ்சிரிப்பு. மழிக்கப்படாத முகம். அதில் நோய்க்குறி இல்லை. மெல்லிய சோர்வு, அவ்வளவுதான். என்னைச் சந்தித்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதற்குக் காரணம் பின்னால் தெரிந்தது.
“இங்கே எழுத்து, புத்தகம் பற்றியெல்லாம் பேச யாருமில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந் தேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வீட்டுக்கு வாருங்கள்.”
அடிக்கடி என்றில்லாவிட்டாலும் அவர் வீட்டிற்குப் பலமுறை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் குடியிருந்த பகுதிக்கு அருகிலேயே