நேரு முதல் மோடி வரை
பரவலான பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற வரலாற்று ஆய்வாளர், ஸ்ரீநாத் ராகவன். புதுதில்லியில் உள்ள சென்டர் ஃபார் பாலிஸி ரிசர்ச் ஆய்வுக் கூடத்தில் முதுநிலை ஆய்வறிஞராக இருக்கிறார். சமூகஅறிவியல் துறை சார்ந்த வளமான பங்களிப்புக்காக இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை விருது (2015) பெற்றிருக்கிறார். மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. நேருவின் காலகட்டத்தையும் அவருடைய அயலுறவுக் கொள்கையையும் விவரிக்கும், ‘War and Peace in Modern India (2010)’,
வங்கதேசத்தின் உருவாக்கத்தை ஆராயும் 1971: ‘A Global History of the Creation of Bangladesh (2013)’ இரண்டாம் உலகப் போர் பின்னணியில் இந்தியாவின் எழுச்சியை விளக்கும் சமீபத்திய நூல், ‘India’s War: The Making of Modern South Asia (2016).’ தனது ஆய்வுப்பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஆ