பாரதி ஆற்றிய சொற்பொழிவின் முன்வடிவம்
ஓவியம்- மணிவண்ணன்
‘கருணை’ - சொற்பொழிவுக் கட்டுரை சுதேசமித்திரனில் 29.04.1905, 01.05.1905, 02.05.1905 ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வெளிவந்தது. முதலிரு நாள்கள் இடம்பெற்றவற்றைப் பெ.சு. மணியும், மூன்று நாள்களும் இடம்பெற்றவற்றைச் சீனி. விசுவநாதனும் கண்டறிந்து வெளியிட்டனர்.
எனினும் 01.05.1905இல் வெளிவந்ததன் சரிபாதிப் பகுதி இதுவரை விடுபட்டிருப்பது இப்போது கண்டறியப்பட்டு, முழுவடிவில் முதன்முறையாகக் ‘கருணை’ வெளியிடப்படுகிறது.
பாரதி ஆற்றிய முதல் சொற்பொழிவு எனவும், சுதேசமித்திரனில் வெளிவந்த பாரதியின் முதல் படைப்பு எனவும் குறிப்பிடப்படுவது ‘கருணை’ என்னும் தலைப்பில் அமைந்த எழுத்தோவியமாகும்.
சென்னை வாழ்வின் தொடக்க காலத்தில் உ.வே.சாமிநாதையர் ஆசிரியராக இருந்த