இனிய மாலைப் பொழுதுதொன்று
ஸ்ரீராம் குழுமத்தின் ஆர். தியாகராஜன் ‘ஸ்பாரோ’வில் நிறுவியுள்ள இலக்கிய விருதை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 10ம் தேதி மாலை எஸ்.என்.டி.டி. பல்கலைக்கழக ஜுஹு வளாகத்தில் நடைபெற்றது. ஸ்பாரோ இலக்கிய விருது 2016 இந்த ஆண்டு மொழிபெயர்ப்பு வகைமைக்குத் தர வேண்டும் என்று நடுவர் குழு (கண்ணன் சுந்தரம், சுகுமாரன், அம்பை) தீர்மானித்தது. இந்திய மொழிகளிலிருந்து இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த இரு எழுத்தாளர்களுக்கும் (பெண் எழுத்தாளர் ஒருவர், ஆண் எழுத்தாளர் ஒருவர்) அயல்நாட்டு மொழி இலக்கியத்தைத் தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு மூலம் கொண்டுவந்த எழுத்தாளர் ஒருவருக்கும் விருது வழங்குவது என்று ஜூன் 21 மற்றும் 23இல் நடந்த நடுவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. வேறு பல மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்தவர்களும் அயல்நாட்டு மொழிகளில் ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து