வரலாற்றின் அபத்தம்; நாடகமல்ல, எதார்த்தம்
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உலகைக் குலுக்கிய பிரஞ்சுப் புரட்சியின் முதன்மையான கதாபாத்திரங்களில் ஒன்று புரட்சியாளர்களால் கில்லட்டினில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பேரரசன் பதினாறாம் லூயியின் மனைவி பேரரசி மேரி அன்ட்டாய்னெட். பிரஞ்சு விவசாயிகள் தாங்கொணாத வறுமையில் உழன்றபோது ஆடம்பரத்தில் திளைத்த பேரரசி, ரொட்டி கேட்டு அரண்மனை முற்றத்தில் திரண்ட மக்களிடம் ‘ரொட்டி இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடலாமே’ எனக் கேட்டதாக அவரைப்பற்றிக் கதை உண்டு. பிந்தைய ஆய்வாளர்களில் சிலர் மேரி அதுபோன்ற கேள்வியைக் கேட்டதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என வாதிட்டாலும் பிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்ட வாக்கியம் அது. அவரது ஆடம்பரத்தின் நினைவாக வெர்சேல்ய்ஸ் அரண்மனையில் ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட சுமார் பன்னிரண்டடி உயரமுள்ள ஒரு ஜோடி