‘கடற்கரையில் சில மரங்கள்’
‘கடற்கரையில் சில மரங்கள்’ - சில பிரதிபலிப்புகள்
ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி ஒரு சில வார்த்தைகள். அவரது முதல் தொகுப்பான ‘அன்று வேறு கிழமை’ இரண்டாம்பதிப்பின் முன்னுரையில் திரு. பதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், ‘நம்மோடு வாழும் ஞானக்கூத்தனின் கவிதைகள் தமிழ் மனம் ஒன்றின் இன்றைய வெளிப்பாடுகள்’ என்று. இது எல்லாத்தரப்பினரிடமிருந்தும் கவிதை வாசிப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். அவரது மொழி ஆளுமைக்கு மொழி வெளிப்பாட்டிற்கு இன்றைக்கு(க்) குறைந்தது பத்து(த்)தொகுதிகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் வெளியாகியிருப்பது மூன்று தொகுதிகள். இது சொல்லப்பட்ட அதே தமிழ் மனத்தின் சுருக்கத்தைக் காண்பிக்கிறது. இன்றைக்கு அக்கறையுடன் எழுதப்படும் கவிதைகள் சில ஆயிரம் மக்களையே எட்ட முடிந்துள்ளது. அதில் ஞானக்கூத்தன்