முரண்பட்டாலும் நண்பர்
மறைந்த ‘சோ’ ராமசாமி சில வட்டங்களில் பத்திரிகையாளராகவும் அரசியல் விமர்சக ராகவும் அறியப்பட்டிருந்தபோதும் அவரைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டபோதெல்லாம் வெகுஜன தினசரியான ‘தினத்தந்தி’ சிரிப்பு நடிகர் சோ என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறது.
வெகுஜன ஊடகமான சினிமாவில் அவர் அப்படித் தான் மக்களிடம் அறிமுகமானார். 1962ல் ‘பார் மகளே பார்’ படத்தின் மூலம் தன் 28வது வயதில் அவர் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டம் படித்துவிட்டுச் சில தனியார் நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார். தான் படித்த விவேகானந்தா கல்லூரியின் சக தோழர்களுடன் உருவாக்கிய விவேகா ஃபைன் ஆர்ட்சின் சார்பில் சென்னையில் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வந்தார். சமூகத்தைக் கிண்டல் செய்யும் கதைகளிலிருந்து மெல்ல மெல்ல அன்றைய நடப்பு அரசியலை, அரசியல்வாதிகளைக் கிண