மனித – மிருகத் தகராறுகள்
மனிதன், குறிப்பாக வெள்ளையின மனிதன், அதிலும் குறிப்பாக காலனி ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆணாதிக்கர்கள் தாங்கள் இந்த உலகின் ஏகபோக அதிபதிகள் என்றும், இந்த உலகில் உள்ள அனைவரும், அனைத்தும் தமக்காகவே படைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியாக நம்பினர், இன்றும் நம்புகின்றனர். காலனியாதிக்கம், நவீன அரசமைப்பின் பரவலாக்கம், ஆதிக்க அறிவியல் வளர்ச்சி, சித்தாந்தம், உலகமயமாதல் போன்றவற்றால் இந்த மனிதாதிக்கச் சிந்தனை வெள்ளையினத்தவர் போலவே வேற்று இனத்த வரையும் பிடித்தாட்டத் தொடங்கியது.
இயற்கையைப் போற்றி வணங்கி, மிருகங்களையும் தங்கள் கடவுளர்களோடு இணைத்து வழிபட்ட தெற்காசியர்களும்கூட மனிதாதிக்கச் சிந்தனைக்கு விதிவிலக்காக விளங்க முடியவில்லை. உண்மையில் மனுவாதம், சாதிவெறி, தூய்மை, ஆச்சாரம், தீண்டாமை, பெண் தீட்டு என்றெல்லாம் பேதைமைகளில் உழன்ற துணைக்கண்ட சமூகங்களை மனிதாதிக்கச்