டிசம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      காஸாவின் துயரம்
      பெரியார்- ராஜாஜி: அன்பார்ந்த எதிரிகள்
      ராஜாஜி - காமராசர்: கோடும் குன்றமும்
      முரணும் இணக்கமும்: சாதி பற்றிய நான்கு படங்கள்
      யெகோவாவின் சாட்சிகள்: சில ஒவ்வாமைகள்
      புலம்பெயர் இலக்கியம்
      சுந்தர ராமசாமியின் நினைவுகளில் துலங்கும் எழுத்தாளர்கள்
    • உரை
      பயணியின் குறிப்பேடு
    • கதை
      கொள்ளை
      பழம்பெரும் நாள்
    • பஞ்சு பரிசில் 2023
      பஞ்சு பரிசில் 2023
    • உரையாடல்
      பாரதியியல் முன்னோடியுடன் ஒரு சந்திப்பு
    • இதழ் அறிமுகம்
      இலக்கணக் கல்வியும் ஆய்வும்
    • அஞ்சலி: என். சங்கரய்யா (1922 -2023)
      தோழர்
    • மதிப்புரை
      காலக் கணக்கு
    • தலையங்கம்-2
      மாறிவரும் தீபாவளியும் மாறாத அரசியலும்
    • தலையங்கம் -1
      புத்தகப் பண்பாடும் அதன் சவால்களும்
    • கவிதைகள்
      கபில நிறம்
    • அறிமுகம்
      பெரியார் - ராஜாஜி - காமராசர்
      ஈழக்கூத்தன் தாசீசியஸ்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2023 அறிமுகம் ஈழக்கூத்தன் தாசீசியஸ்

ஈழக்கூத்தன் தாசீசியஸ்

அறிமுகம்
அ.கா. பெருமாள்

நாடகர்-ஊடகர்- ஏடகர்
(ஈழக்கூத்தன் ஏ.சீ.தாசீசியஸ்
பவளவிழா மலர் 2016)

வெளியீடு: 
தமிழர் கலை பண்பாட்டு நடுவகம், 
சுவற்சலாந்து.

பக். 760
ரூ. 600

முன்னாளில் பிரதம மந்திரியாக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொலைப்பட்ட பின்பு (1991 மே 21) இந்திய தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு சரிந்து விட்டதாக அக்கால ஊடகங்கள் ஒருமித்த குரலில் வெளிப்படுத்தின. 1983இல் மொத்த தமிழகமும் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த காலம் போய்விட்டது என்று 1992க்குப் பின் இந்திய தமிழ் ஊடகங்கள் கூறிய காலத்தில்தான் ஈழக்கூத்தனின்  நாராய் நாராய் பயணம் தமிழகத்தில் நடந்தது.

1997 மார்ச் 26இல் ஆரம்பித்த நாராய் நாராய் பயணம் பாண்டிச்சேரி, மதுரை, தஞ்சை, விழுப்புரம் என பதினைந்து இடங்களில் தொடர்ந்தது. இந்த இடங்களில் ஈழக்கூத்தன் தயாரித்த நாடகங்கள் நடந்தன. மகாகவியின் புதியதோர் வீடு, மா. சண்முகசுந்தரத்தின் எந்தையும் தாயும், ஈழக்கூத்தனின் பொறுத்ததுபோதும் என்னும் நாடகங்களில் 33 பேர் பங்குபெற்றனர்.

பேராசிரியர் வீ. அரசு இந்த நாடகங்களைப் பற்றிக் கூறும்போது ஈழத்தமிழனுக்கும் இந்திய தமிழனுக்கும் 1991க்குப் பின் ஏற்பட்ட விரிசல், ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவில் விரிசலை உருவாக்கியது. அந்தச் சூழ்நிலையில் உண்மையென்று நம்பினோம். ஆனால் அது இல்லையென்பதை இந்த நாடகங்களைப் பார்த்தவர்கள் எதிர்வினையாக்கியபோது தெரிந்தது என்கிறார்.

யாழ்ப்பாணம் தாழையடி என்ற கிராமத்தில் பிறந்த (1940) ஈழக்கூத்தன் என்ற ஏ.சீ. தாசீசியஸ் நாடகாசிரியர், ஊடகவியலாளர், கவிஞர், கட்டுரையாளர், கல்வியாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இப்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். இவரது பள்ளி, கல்லூரிப் படிப்புகள் பேராதனை ஸ்ரீலங்கா, கொழும்பு பல்கலைக்கழகங்களில் நடந்தன. அரங்கக்கலை பற்றிக் கொழும்பு, அக்குவைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். லண்டனில் எம்.பில் பட்டம் பெற்றார்.

ஈழக்கூத்தன் ஆரம்பத்தில் மீன்வள அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். பின்னர் கல்வியமைச்சகத்தில் பதிப்பாசிரியர், கல்வி அதிகாரி, கல்லூரிப் பேராசிரியர், இலங்கை வானொலியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், லண்டன் பி.பி.சியில் தமிழ் ஒலிபரப்புநர், ஜெர்மனியில் பாடத்திட்ட உறுப்பினர் எனப் பல பணிகள் செய்தார். இவரது மனைவி விமலா. மக்கள் கவிதா, நிவேதிதா. ஈழத்தில் பணியாற்றியபோது நாடகராக அறியப்பட்டார். பீட்டர் புறுக், ரிச்சட் ஸ்கெச்சலர் போன்றோரிடம் நாடகப் பயிற்சி பெற்றவர். தமிழகத்தில் இராமாநுஜம், ந. முத்துசாமி போன்றோரின் நண்பர்.

அடேல் பாலசிங்கம் எழுதிய Will to Freedom என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவரது குறுநூல்களில் தமிழ் நாடகர்களுக்கு (1994), இரை மீட்டல் (2008 இயல் விருது ஏற்புரை), புலம்பெயர் நாடுகளில் அரங்கக்கலை (1998) ஆகியன முக்கியமானவை. இவை தவிர கவிதைகளும் உண்டு. இவரது நாடகப் பனுவல்கள் ஏன் ஓடுகிறாய், ஒரு கவளம் சோறு, பஞ்சவடிக்காரன், பொறுத்ததுபோதும், கோடை, கந்தன் கருணை, புதிய தொரு வீடு, நாராய் நாராய் என 15க்கும் மேல் உள்ளன.

இந்திய தமிழ் ஆய்வாளர்களிடமும் படைப்பாளி களிடமும் ஈழத்து அறிஞர்கள் பற்றி நல்ல மரியாதை உண்டு. ஆறுமுகநாவலர், விபுலாநந்தர் என்ற வரிசையில் கைலாசபதி, சிவத்தம்பி என அது தொடர்கிறது. ஈழத்துப் போராட்டமும் புலப்பெயர்ச்சியும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. இந்த வெளி இந்திய தமிழகத்திற்கு இழப்பு; என்றாலும் புலம்பெயர்ந்தவர்கள் சும்மா இருக்கவில்லை. அவர்களின் நன்கொடை அதிகம்.

இப்படி புலம்பெயர்ந்தவர்களில் ஈழக்கூத்தன் மிகமிக முக்கியமானவர். இவரது 75ஆவது ஆண்டு நிறைவு பவளவிழா (2016) மலர் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்தத் தொகுப்பு இவரைப் பற்றிய பல செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த மலரில் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பலர் எழுதியுள்ளனர். ஆரம்பத்தில் 28 கட்டுரைகள் இவரைப்பற்றி விரிவாகப் பேசுகின்றன. ஈழக்கூத்தனின் அரங்க ஆற்றுகை அனுபவங்கள், அரங்க நினைவுகள் பற்றிப் பதின்மூன்று பேரின் கட்டுரைகள் உள்ளன. ஈழக்கூத்தனின் நேர்காணல்கள் 5, பேச்சுகள்- எழுத்துக்கள் 5, பாடல்கள் 14, நாடகப் பனுவல்கள் 9 ஆகியனவும் இத்தொகுப்பில் உள்ளன. இவை ஒட்டுமொத்தமாக ஈழக்கூத்தனை அடையாளம் காட்டுகின்றன.

அபாரமான கற்பனையும் ஆற்றலும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட ஆளுமை ஈழக்கூத்தன் என்கிறார் மவுனகுரு. நூலின் இறுதியில் ஈழக்கூத்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் உள்ளன.

               மின்னஞ்சல்: perumalfolk@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.