தலையங்கம்
ஆசிரியர் குழு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. இரு தரப்புக்கும் நடுவில் அமெரிக்கா நாட்டாண்மையாகச் செயல்பட்டது என்பதையும் வர்த்தகத்தை வைத்துச் சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று டிரம்ப் சொல்வதையும் இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுத்திருக்கிறது. எந்தக் காரணத்தை முன்ன

கண்ணோட்டம்
கண்ணன்

தமிழக நூலகத் துறை வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தை அறிவித்து ஓராண்டிற்குப் பின்னர் முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆணைக்காகப் பல ஆண்டுகள் தவம் இருக்க வேண்டியதில்லை. இப்போதே விண்ணப்பிக்கலாம். இந்தக் கொள்கையும் ஆணையும் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் பாய்ச்சல் என்பது

கட்டுரை
அருந்ததி ராய்

கேரளாவின் மிகச்சிறந்த மார்க்சியத் தத்துவ அறிஞர்களில் ஒருவரான புகழ்பெற்ற பி. கோவிந்த பிள்ளையின் பெயரில் எனக்கு இந்த மேன்மைமிகு விருதினை வழங்கியதற்கு நன்றி. அத்துடன், இந்த நிகழ்வைச் சிறப்பிக்க என். ராமை அழைத்ததற்கும் நன்றி. கடந்த ஆண்டு இதே விருது அவர் பெற்றதை நான் அறிவேன், ஆயினும் பல்வேறு வகையில்

கவிதை
நந்தன் கனகராஜ்

ஓவியம்: ப்ரதீப் சந்திர ஸ்ரீ (Sethu Book Art Project - Pradeep Chandrasri, Srilanka)   உப்பாளன் உப்புச் சப்பில்லாத காரணங்களைச் சொல்லக் கூடாதென்கிறார்கள் கர்ப்ப காலத்தில் அம்மாவுக்கு நீர்ச்சத்து குறைவில்லை அறையின் சுவர்களுக்கு உள்ளிருந்து கண்கள் நோகப் பேசியிருக்கிறாள் வெளித்

கடிதங்கள்

ச. தமிழ்செல்வனின் ‘செங்கொடி இயக்கத்தின் திசைவழி’ கட்டுரை, மூன்று மாநிலங்களில் அரசு அதிகாரத்தில் இருந்தது, நாடாளுமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தது போன்றவை இன்று பழம்பெருமையாய் மாறிவிட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு இளைஞர்களின் வருகை பெரும் நம்பிக்கையைத் தருவதாக இ

புக்கர் பரிசு 2025
ப. சகதேவன்

“என்னோட பொணத்த கபருஸ்தான்லே பொதைக்க நீங்க அனுமதிக்கலேனா என்ன போச்சு? என் பொணம் நாறீட்டுத் தான் கெடக்கும். முனிசிபாலிட்டிக் காரங்க வந்து எடுத்துட்டுப் போய்ப் பொதைப்பாங்க... அப்ப நான் என்னத்தப் பாத்துட்டு இருக்கப் போறேன்.” மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி, பானு முஷ்தாக் பெண்களை மசூதிக

கதை
பெருந்தேவி

ஓவியம்: ரோஹிணி மணி ஆட்டோ அன்னை சத்யா ஸ்டூடியோவுக்கு அருகில் முக்கோணப் பகுதியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கு வேகமாகத் திரும்பியது. சோழிங்கநல்லூரிலிருந்து இங்கே வருவதற்கு ஒன்றரை மணிநேரமாவது ஆகியிருக்கும். இடையில் இரண்டு சாலைகள் ஒருவழிச் சாலையாக மாறியிருந்தன. ஆட்டோக்காரர் முணுமுணுத்துக்கொண்டே

காலச்சுவடு 30 & 300
கண்ணன்

காலச்சுவடு பதிப்பகம் 30, இதழ் 300 எனும் மைல்கல்லை எப்படிக் கொண்டாடலாம் என்று  யோசித்துவருகையில் அதன் முக்கியப் பங்களிப்புகள் என்ன என்றும் பரிசீலிக்கத் தொடங்கினேன். காலச்சுவடு தமிழகப் பதிப்பகம் அல்ல, நாகர்கோவிலில் வேர்விட்டிருக்கும்  பன்னாட்டுத் தமிழ்ப் பதிப்பகம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக

திரை: டூரிஸ்ட் பேமிலி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

டூரிஸ்ட் பேமிலி’ படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தப் படம் பற்றி எனக்குப் பல கேள்விகள் ஆரம்பித்துவிட்டன. இதற்குக் காரணம் ஆரம்பத்தில் திரையில் தோன்றிய ஒரு செய்தி: சிறீலங்காத் தமிழைப் புரிந்துகொள்ளும்படியாகத் தமிழ்ப் பொதுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கையில் இரண்டு கலாச்சார உட்

அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025)
கண்டராதித்தன்

குமார் அம்பாயிரத்தின் இலக்கியப் பயணம் 1990களின் இறுதியில் ஒகேனக்கலில் பிரம்மராஜன் ஒழுங்குசெய்த கவிதைப் பட்டறையிலிருந்து தொடங்கியது. அக்கவிதைப் பட்டறையில்  அவரது ஏழு கவிதைகள் பிரமாதமாகச் சிலாகிக்கப்பட்டதையும், தமிழ்க் கவிதைப் பரப்பில் கவிஞராக அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக மூத்த கவிகள

கதை
சுஜா செல்லப்பன்

ஓவியம்: ரவி பேலட் காற்று பெரும் சத்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்தது, கிடைக்கும் எல்லா இடுக்குகள் வழியாகவும். தலைக்கு நேர்மேலே கேட்பதுபோல் இடிச்சத்தம். கருத்த வானில் மின்னல் ஒளிக்கீற்று கோடுகள் போட்டது. இருபத்தி மூன்றாவது மாடியில் திறந்தவெளிக் காட்சிகள் சன்னல் வழி தெரியும்படி பார்த்து வாங்கிய வ

கற்றனைத்தூறும்- 7
சாரா அருளரசி

அனைவரும் சமமான வாய்ப்பையும் வளர்ச்சியையும் பெற வழிவகை செய்யுமிடமே பள்ளிக்கூடம். பள்ளிகளை அரசு நடத்துவதே இதனை உறுதி செய்வதாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையிடமும் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதுடன், அவர்களைச் சமூகத்துக்குப் பயன் தரும்வகையில் நல்ல குடிமக்களாக மாற்றுவதே பள்ளிகளின் நோக்கம். மாணவர்களி

மதிப்புரை
எஸ். செந்தில்குமார்

சிரமமான காரியம் (மொழிபெயர்ப்பு முன்னுரைகள்) க.நா. சுப்ரமண்யம் (ப-ர்): ஸ்ரீநிவாச கோபாலன் வெளியீடு:  யாவரும் பதிப்பகம் 24, கடை எண் B, S.G.P. நாயுடு காம்ளக்ஸ்,  தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம், பாரதியார் பூங்கா எதிரே,  வேளச்சேரி மெயின்ரோடு,  வேளச்சேரி, சென்னை-42 பக்.

மதிப்புரை
ரா. சின்னத்துரை

கேரள பழங்குடிக் கவிதைகள் தேர்வும் மொழியாக்கமும் நிர்மால்யா வெளியீடு:  தன்னறம் நூல்வெளி குக்கூ காட்டுப்பள்ளி சென்னை - 73 பக். 188 ரூ. 200 சங்கத் தமிழ்முதல் வளமான இலக்கிய மரபுடைய மலையாள மொழியிலும் விளம்பு நிலைப் படைப்புகள் மீதான ஓர்மை இலக்கியத் தளத்தில் ஏற்பட்டிருக்கிறது. 35க்கும்

மதிப்புரை
கிருஷ்ணமூர்த்தி

யாக்கை (நாவல்) கே.ஜே. அசோக்குமார் வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் - 629 001 பக். 328 ரூ. 390 காமத்தைப் புனைகதைகள் இரண்டு விதமாக அணுகுகின்றன. ஒன்று, களிப்புடன் நின்றுவிடக்கூடிய கதைகள். மற்றொன்று, களிப்பின் பின்னிருக்கக்கூடிய வேட்கை, சுதந்திரம், சுயமரி

மதிப்புரை
ச. பால்ராஜ்

வீரப்போர் மங்கை குயிலி (குறுங்காவியம்) வானவில் கே. ரவி தமிழில்: இலந்தை  சு. இராமசாமி வெளியீடு:  நிவேதா பதிப்பகம் சென்னை - 73 பக். 72 ரூ. 80 ‘த பாலட் ஆஃப் த வாரியர் கேர்ல் குயிலி’ (The Ballad of the Warrior-girl, Kuyili). ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவ

கட்டுரை
ஜார்ஜ் ஜோசப்

1988 முதல் தற்போதுவரை பெருமாள்முருகனின் 128 சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தொழில் வழி அமைந்த சூழலும் குடியானவர்களின் அன்றாடமும் அவர்கள் ஆழப் பற்றியிருக்கும் சாதியமும் ஆண்-பெண் உறவுச் சிக்கலும் சிறார் உலகும் நாட்டுப்புறக் கூறுகளும் மூத்தோர் மீதான கரிசனை மிக்க பக்கங்களுமெனச் சிற்சில தருணங்கள் முதல் நீண்ட

கவிதை
ஜோசப் செல்வராஜ்

ஓவியம்: ஜார்ஜ் ஷ்கோல்ஸ் நசித்திசேர் லார்ம். 1919   உள்ளிரைச்சல் எனக்கு எப்போதும் இரைச்சல்கள் வேண்டும்! அது மனிதர்களின் குரல்களாக இருக்கலாம்!  பறவைகளின் கத்தல்களாக இருக்கலாம்!  தெருநாய்களின் கூச்சல்களாக இருக்கலாம்!  இப்படி எதுவாகிலும் இருக்கலாம்! என் உயிருக்கு இப

கதை
சுஜாதா செல்வராஜ்

ஓவியம்: செல்வம் வள்ளி அவசர அவசரமாகக் கட்டுத்தரையைக் கூட்டிக் கொண்டிருந்தாள். பால்காரர் வந்து பால் பீய்ச்சிக்கொண்டு போனபின்பு காப்பி போட்டுக் குடித்துவிட்டு ராமாயிதான் கட்டுத்தரையைக் கூட்டுவது வழக்கம். இன்று இன்னும் விடியக்கூட இல்லை, இதென்னடா புதுசா வேறு ஒருத்தி வந்து பெருக்கிக்கொண்டு இருக்கிற

பஹ்தியார் ஹிதாயத் கவிதைகள்
தமிழில்: க. மோகனரங்கன்

1974ஆ.ம் ஆண்டு அஜர்பைஜானில் உள்ள கசாக் பகுதியில் பிறந்தவர். இதுவரையிலும் நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. திருமணமானவர், மூன்று குழந்தைகளின் தந்தை. தற்போது, ​​கசாக்கில் வசிக்கும் இவர் வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிகிறார் கண்ணியம் அவள் தன் கணவனின் கால்சட்டைகளைத் துவைக்கும்போது, 

கட்டுரை
அம்ஷன் குமார்

எர்னேஸ்ட் ஹெமிங்வே அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆங்கிலச் சிறுகதை ஒன்றை 22 ஆண்டுகளுக்குப் பின் லத்தின் அமெரிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் லுயி போர்ஹே தனது ஸ்பானிஷ் சிறுகதை ஒன்றின் மூலம் தொடர்கிறார். பத்திரிகைகளுக்குக் கதைகள்தாம் முக்கியம். ஏனெனில் வாசகர்கள் பிரதானமாகக் கதைப் பிரியர்கள

கட்டுரை
சுப்பிரமணி இரமேஷ்

தஞ்சையின் அடையாளமாக இருப்பது பெரியகோயிலுக்கு அடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். 1981ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ஆம் நாள் அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனால் ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கிவைக்கப்பட்ட தமிழ்க்கோயில் இந்தப் பல்கலைக்கழகம். ஆமாம், ஒரு காலத்தில் அது கோயிலாகத்தான் இருந்தது

கட்டுரை
இந்திரா பார்த்தசாரதி

குவர்னிகா (1937) ஓவியர் பிகாஸோ 1937இல், ஸ்பானிஷ் அரசாங்கத்தின் ஆணையின்படி, ‘குவெர்னிகா’ என்ற ஓவியம் வரைந்தார். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின்போது, நாஜி ஜெர்மானிய-இத்தாலியப் படைகள், குவெர்னிகா என்ற ஸ்பெயின் நகரத்தின் மீது குண்டுமாரிப் பெய்தன. இதனால் ஏராளமான உயிர்ச் சேதமும் பொருட்சேதமு

உள்ளடக்கம்