மயானக் கொள்ளை
ஓவியம்: ரோஹிணி மணி
ஆட்டோ அன்னை சத்யா ஸ்டூடியோவுக்கு அருகில் முக்கோணப் பகுதியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கு வேகமாகத் திரும்பியது. சோழிங்கநல்லூரிலிருந்து இங்கே வருவதற்கு ஒன்றரை மணிநேரமாவது ஆகியிருக்கும். இடையில் இரண்டு சாலைகள் ஒருவழிச் சாலையாக மாறியிருந்தன. ஆட்டோக்காரர் முணுமுணுத்துக்கொண்டே வந்தார். “மயிலாப்பூருக்கு இப்படி ஏன் போறீங்க, அந்தப் பக்கம் திரும்பியிருக்கலாமே” என்று செல்வி கேட்டாள். “மெட்ரோ வேலை நடக்குது. அங்கங்கே ரோடு மூடிவச்சிருக்காங்க” என்றார் ஆட்டோ டிரைவர். “எப்படி போனாலும் ரெண்டு மூணு கிலோமீட்டர் சுத்தித்தான் போவணும், நீங்க லொகேஷன் சரியா போட்டிருந்தா இப்டியே சுருக்க போயிரலாம்.” செல்வி இறங்கும்போது ஆட்டோக்காரர் பேசியதைவிடக் கூடக் கேட்கப்போகிறார் என்று தெரிந்தது. ஓலா சேவை