உப்பாளன்
ஓவியம்: ப்ரதீப் சந்திர ஸ்ரீ (Sethu Book Art Project - Pradeep Chandrasri, Srilanka)
உப்பாளன்
உப்புச் சப்பில்லாத காரணங்களைச்
சொல்லக் கூடாதென்கிறார்கள்
கர்ப்ப காலத்தில்
அம்மாவுக்கு
நீர்ச்சத்து குறைவில்லை
அறையின் சுவர்களுக்கு
உள்ளிருந்து
கண்கள் நோகப்
பேசியிருக்கிறாள்
வெளித்தெரியக் கூடாதென
சேமிப்பாகத் தேக்கியிருந்தாள்
உண்மையில்
நான்
உப்பங்குழியில் கிடந்தேன்
தொப்புளுக்கு வழிந்து
சேகரமான
கண்ணீர்க் கொடியில் வளர்ந்து
பனிக்குடம் உடைந்திருந்தேன்
மார்புக் காம்புகளில்
கரிப்புகளைச்
சப்பக் கிடைத்தது
தூக்கிக் கொஞ்ச