தாழொடு துறப்ப
ஓவியம்: ரவி பேலட்
காற்று பெரும் சத்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்தது, கிடைக்கும் எல்லா இடுக்குகள் வழியாகவும். தலைக்கு நேர்மேலே கேட்பதுபோல் இடிச்சத்தம். கருத்த வானில் மின்னல் ஒளிக்கீற்று கோடுகள் போட்டது. இருபத்தி மூன்றாவது மாடியில் திறந்தவெளிக் காட்சிகள் சன்னல் வழி தெரியும்படி பார்த்து வாங்கிய வீடு. ஆனால் மழையைத் திரையின்றிப் பார்க்க முடிந்ததேயில்லை. இந்த வீட்டில் மொத்தமும் பத்து சன்னல்கள். ஒவ்வொன்றுக்கும் இரண்டு கதவுகள் வீதம் இருபது கதவுகளையும் மூடுவதற்குள் மழை பெய்யத் தொடங்கியிருந்தது.
அவளது அறைக்கு வந்தாள். இருட்டு சூழ்ந்திருந்தது. சன்னல் பக்கம் மட்டுமே சிறிது வெளிச்சம் இருந்தது. அந்த அறையின் சன்னலை மட்டும் முழுதும் மூடாமல் தூறல் விழும் இடத்தில் ஒரு ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்துகொண்டாள். துளியே என்றாலும் பெருவெளியில் ம