ஜூன் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      “நம் நாடு தனது தார்மீக நெறியை இழந்துவிட்டது”
      புனைவில் இசைக்கப்படும் விடுதலை
      ஹெமிங்வேயைத் தொடரும் போர்ஹே
      தமிழ்ப் பல்கலைக்கழகம் வீழ்ந்துகொண்டிருக்கும் பதிப்புத்துறை
      இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
    • கதை
      மயானக் கொள்ளை
      தாழொடு துறப்ப
      வெள்ளைச் சீலை
    • திரை: டூரிஸ்ட் பேமிலி
      பெரியண்ணன் கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தவர் கதை
    • காலச்சுவடு 30 & 300
      பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      நம்பினால் நம்புங்கள்!
    • மதிப்புரை
      காலத்தின் குரல்
      பிரபஞ்ச தரிசனம்
      உடல்களின் உலகம்
      பெண் போராளியின் வரலாறு
    • அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025)
      நவீன தொல்குடி மனம்
    • பஹ்தியார் ஹிதாயத் கவிதைகள்
      கண்ணியம்
    • தலையங்கம்
      கனன்றுகொண்டிருக்கும் எரிமலை
    • கற்றனைத்தூறும்- 7
      அனைவருக்கும் கிடைக்குமா கல்வி?
    • புக்கர் பரிசு 2025
      ‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’
    • கவிதை
      உப்பாளன்
      உள்ளிரைச்சல்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2025 மதிப்புரை பிரபஞ்ச தரிசனம்

பிரபஞ்ச தரிசனம்

மதிப்புரை
ரா. சின்னத்துரை

கேரள பழங்குடிக் கவிதைகள்
தேர்வும் மொழியாக்கமும்
நிர்மால்யா

வெளியீடு: 
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
சென்னை - 73
பக். 188 ரூ. 200

சங்கத் தமிழ்முதல் வளமான இலக்கிய மரபுடைய மலையாள மொழியிலும் விளம்பு நிலைப் படைப்புகள் மீதான ஓர்மை இலக்கியத் தளத்தில் ஏற்பட்டிருக்கிறது. 35க்கும்  மேற்பட்ட பழங்குடி இன  மக்கள் வாழும் கேரளாவில் பழங்குடி மக்களின் தாய்மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் மலையாள வரி வடிவத்தில் எழுதப்பட்டுத் தொடர்ந்து இலக்கிய இதழ்களில் வெளியாகின. அவை தொகுப்பட்டுக் ‘கேரள பழங்குடிக் கவிதைகள்’ ஆக வெளிவந்திருக்கிறது.

கேரளாவில் புழக்கத்தில் உள்ள 11 பழங்குடி மொழியில், 18 பழங்குடிக் கவிஞர்கள் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

முதுவான், றாவுளா, இருளர், முடுகா, முள்ளுக்குறும்பர், பணியர், மாவிலான் துளு உள்ளிட்ட மொழிகளில்  மலையாள வரி வடிவத்தில் இக்கவிதைகள் எழுதப்பட்டு இருமொழியில் வெளியான.  இத்தொகுப்பே கேரள பழங்குடிக் கவிதைகள்’ தொகுப்பாக வந்துள்ளது.

இலக்கியக் கோட்பாடுகளுக்குள் சிக்காத இக்கவிதைகள் காட்டாறுகள்போல் இயற்கையழகுடன் ஒளிர்கின்றன. பழங்குடி மொழிகளில் எழுதப்பட்ட உலகக் கவிதைகள் என்றால் மிகையில்லை.

பழங்குடி மக்களின் கவிதைகளில் மொழி, நிலம், தேசம் உள்ளிட்ட  எல்லைகளைக் கடந்த பிரபஞ்ச தரிசனமே நிறைந்துள்ளது.

உலகின் ஆதிக்கவிகள் பழங்குடி மக்கள். நவீன கவிமொழிச் செயல்பாடுகளின் தொட்டிலாகப் பழங்குடிகள் விளங்குகிறார்கள். நவீன உலகின் ஆதிக்கவிகளாக அறியப்படும் வால்மீகிமுதல் பலரையும்  பழங்குடி மக்களுடன் தொடர்புபடுத்தும் வழக்காறுகள் நிலவுகின்றன. எனினும் பல்வேறு கோட்பாடுகளுக்குள் தங்கியுள்ள இன்றைய நவ கவிதைகளிலிருந்து பழங்குடிகள் அந்நியமாகியுள்ளனர். அவர்களின் மொழிகள் இன்றைய பெருமொழி அதிகாரத்தில் தங்கள் இடத்தையும் இழந்துவிட்டன. அண்மைக்காலமாக இதில் வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியாகவே இத்தொகுப்பைக் வாசிக்க வேண்டியிருக்கிறது.

கவிஞர் அசோகன் மறையூர் தன் தாய்மொழியான முதுவான் பழங்குடி மொழியில் எழுதிய கவிதை பிரபஞ்சத்தின் தரிசனமாக உள்ளது.

பூவுக்குள் இருக்கும் தேனில்

சூரியன் கிடந்து

கொதிக்கின்றது.

சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும்

கொக்குகள்

வெந்தும் கருத்தும் போன

தினங்கள்

என்ற இக்கவிதையே பழங்குடிக் கவிதைகள் பிரபஞ்சத் தரிசனம்  என்பதற்கு சான்றாகும் இதற்குமேல் வேறென்ன சான்று வேண்டும்?

கவிஞர் அஜயன் மடூர் தன் மொழியான முள்ளுக் குறும்பர் மொழியில் எழுதிய கவிதையிலும் இதனையொத்த பார்வையைக் காண முடிகிறது.

காட்டின் கோடைக்காலம் 

எரிந்த காட்டில்

வற்றிய நதியில்

இலை உதிர்ந்த மரங்களில்

மூச்சுத் திணறிச் சாகும் முன்பு

என்ற வரிகளிலும் இதனையொத்த பார்வையை அறிந்துகொள்ள முடியும்.லிஜினா கடுமேனி மலைவேட்டுவன் மொழியில் எழுதியகவிதையில் சொல்கிறார்:

ஆதியில் மண்ணுக்கு வந்தவர்கள்

எங்கள் கூட்டத்தினர்.

ஆதியில் மண்ணில் பிறந்தவர்கள்

எங்கள் கூட்டத்தினர்.

காட்டிலும் மலையிலும் நடந்தோம்

காட்டுக்கிழங்கைத் தின்றோம்

காட்டில் வசித்தது அந்தக் கூட்டம்

நாங்கள் காட்டுவாசிக் கூட்டம்

என்று எழுதிச்செல்கிறார்.

மாவிலன் துளு மொழியில் கவிஞர் தன்யா வேங்கச்சேரி

மழை பெய்யும்போது

கலங்கிப் புரளும்போது

பார்த்ததுண்டா ?

முத்தமிட்டு முத்தமிட்டுத் திரும்பிப்போகும்

அலைகளை வாரியெடுத்ததுண்டா ?

எனக் கேட்கும் தன்யாவின் கேள்வியும் பார்வையும் ஆழ்ந்த உட்பொருளும் தரிசனமும் நிறைந்தது. பழங்குடி மக்களின் இக்கவிதைகளில் இந்தப் பார்வைகள் தளும்பி வழிபவை.

     மின்னஞ்சல்: chinnathurai@kalachuvadu.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.