இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
குவர்னிகா (1937)
ஓவியர் பிகாஸோ 1937இல், ஸ்பானிஷ் அரசாங்கத்தின் ஆணையின்படி, ‘குவெர்னிகா’ என்ற ஓவியம் வரைந்தார். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின்போது, நாஜி ஜெர்மானிய-இத்தாலியப் படைகள், குவெர்னிகா என்ற ஸ்பெயின் நகரத்தின் மீது குண்டுமாரிப் பெய்தன. இதனால் ஏராளமான உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. பிகாஸோவின் ஓவியம் இதைக் கருவாகக்கொண்டது.
அந்த ஓவியம் உலகப் புகழ் வாய்ந்த ஓவியமாகிப் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ‘போரை எதிர்க்கும் இதைக் காட்டிலும் சிறந்த கலை உலக ஆயுதம் இருக்க முடியாது’ என்றார்கள் பலர். அந்த ஓவியத்தில் காணும் ஒவ்வொருப் பொருளையும் உருவகமாகக் கண்டு பாராட்டினார்கள்.
ஆனால் இந்த ஓவியத்தைத் தாக்கியவர்களும் உண்டு. அவர்களிலே முக்கியமானவர் சார்த்ரே. ‘ இந்த மிகைப்