கண்ணியம்
1974ஆ.ம் ஆண்டு அஜர்பைஜானில் உள்ள கசாக் பகுதியில் பிறந்தவர். இதுவரையிலும் நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. திருமணமானவர், மூன்று குழந்தைகளின் தந்தை. தற்போது, கசாக்கில் வசிக்கும் இவர் வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிகிறார்
கண்ணியம்
அவள் தன் கணவனின் கால்சட்டைகளைத் துவைக்கும்போது,
ஒவ்வொரு முறையும்,
அவனுடைய பைகளில் இருந்த பணத்தையும் சேர்த்தே துவைத்தாள்.
முதலில், அவ்வாறு கவனக்குறைவாக இருந்ததற்காக
அவன் அவளைக் குறை கூறினான்.
பிறகு அவன் புரிந்துகொண்டான்;
அது நயத்தக்க நற்பண்பு என்பதை.
அவள் அவனது பைகளை
ஒருபோதும் சோதித்துப் பார்த்ததில்லை.
“அவ்வளவு கண்ணியம் ஆகாது, என் கண்ணே,”
அவன் சொன்னான்