“நம் நாடு தனது தார்மீக நெறியை இழந்துவிட்டது”
கேரளாவின் மிகச்சிறந்த மார்க்சியத் தத்துவ அறிஞர்களில் ஒருவரான புகழ்பெற்ற பி. கோவிந்த பிள்ளையின் பெயரில் எனக்கு இந்த மேன்மைமிகு விருதினை வழங்கியதற்கு நன்றி. அத்துடன், இந்த நிகழ்வைச் சிறப்பிக்க என். ராமை அழைத்ததற்கும் நன்றி. கடந்த ஆண்டு இதே விருது அவர் பெற்றதை நான் அறிவேன், ஆயினும் பல்வேறு வகையில் இந்தக் கௌரவத்தை என்னுடன் பகிர்ந்துகொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. 1998இல் அவர், ப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியராக இருந்தபோது, அவுட்லுக் இதழின் ஆசிரியர் வினோத் மேத்தாவுடன் இணைந்து இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைகள் குறித்த ‘The End of Imagination’ என்ற எனது முதல் அரசியல் கட்டுரையை வெளியிட்டார். அதற்குப் பின்னரும் பல ஆண்டுகளாக எனது படைப்புகளை வெளியிட்டிருக்கிறார். துல்லியமும் கூர்மையும் அதேசமயம் எதற்கும் தலைவணங்காத ஆசிரியராக அவர் இருந்ததுதான், இன்று எழுத்தாளராக நான்