ஜூன் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      “நம் நாடு தனது தார்மீக நெறியை இழந்துவிட்டது”
      புனைவில் இசைக்கப்படும் விடுதலை
      ஹெமிங்வேயைத் தொடரும் போர்ஹே
      தமிழ்ப் பல்கலைக்கழகம் வீழ்ந்துகொண்டிருக்கும் பதிப்புத்துறை
      இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
    • கதை
      மயானக் கொள்ளை
      தாழொடு துறப்ப
      வெள்ளைச் சீலை
    • திரை: டூரிஸ்ட் பேமிலி
      பெரியண்ணன் கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தவர் கதை
    • காலச்சுவடு 30 & 300
      பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      நம்பினால் நம்புங்கள்!
    • மதிப்புரை
      காலத்தின் குரல்
      பிரபஞ்ச தரிசனம்
      உடல்களின் உலகம்
      பெண் போராளியின் வரலாறு
    • அஞ்சலி: குமார் அம்பாயிரம் (1975&2025)
      நவீன தொல்குடி மனம்
    • பஹ்தியார் ஹிதாயத் கவிதைகள்
      கண்ணியம்
    • தலையங்கம்
      கனன்றுகொண்டிருக்கும் எரிமலை
    • கற்றனைத்தூறும்- 7
      அனைவருக்கும் கிடைக்குமா கல்வி?
    • புக்கர் பரிசு 2025
      ‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’
    • கவிதை
      உப்பாளன்
      உள்ளிரைச்சல்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2025 காலச்சுவடு 30 & 300 பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்

பன்மைத்துவத்தின் ஒருமித்த பயணம்

காலச்சுவடு 30 & 300
கண்ணன்

காலச்சுவடு பதிப்பகம் 30, இதழ் 300 எனும் மைல்கல்லை எப்படிக் கொண்டாடலாம் என்று  யோசித்துவருகையில் அதன் முக்கியப் பங்களிப்புகள் என்ன என்றும் பரிசீலிக்கத் தொடங்கினேன். காலச்சுவடு தமிழகப் பதிப்பகம் அல்ல, நாகர்கோவிலில் வேர்விட்டிருக்கும்  பன்னாட்டுத் தமிழ்ப் பதிப்பகம்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல பண்பாட்டு ஆர்வங்களும் அரசியல் சார்புகளும் உடைய  பல பரிமாணங்கள் கொண்ட ஒரு பன்னாட்டுக் குழுவின் பங்களிப்பு பரந்துபட்டதாக இருப்பது அதிசயமல்ல. ஆனால் காலச்சுவடின் சில முக்கியமான பங்களிப்புகள் எனது சிந்தையில் அழுத்தமாகப் பதியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. உதாரணத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் சு. இராசாராம் ஐந்து நூல்களைத் தொகுத்து வெளியிடும் திட்டத்தோடு (தமிழ்மொழிக் கல்வி, தமிழ் மொழி அரசியல், தமிழ் நவீனமயமாக்கம், மொழிபெயர்ப்புப் பார்வைகள், தமிழ் பதிப்பியல்) அணுகினார். அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இத்துறைகளில் பல தொகுதிகளாகத் தொகுக்கும் அளவுக்கு காலச்சுவடு ஆக்கபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் என்று நான் உணர்ந்ததில்லை.

ஒப்பீட்டிலக்கியப் பேராசிரியர் Claudine Le Blanc தலைமையில் லெட்டிசியா இபானஸ் முன்னிலையில் Sorbonne பல்கலைக்கழகத்தில் மார்ச் 21 அன்று நடைபெற்ற ‘காலச்சுவடு 30' நிகழ்வு.

சமீபத்தில் இளம் ஆய்வாளர் ஊ. முத்துப்பாண்டி, காலச்சுவடில் வெளிவந்த கறுப்பிலக்கியப் பிரதிகளின் பட்டியலை அனுப்பிவைத்தார். இரண்டு தொகுதிகளாக வெளியிடும் அளவுக்குப் படைப்புகள் வெளி வந்துள்ளன. இதுவும் காலச்சுவடின் அறியப்படாத ஒரு பரிமாணம் வெளிப்பட்டது போன்று இருந்தது.

இவைபோல இன்னும் பலவும் வெளிவரலாம். புதிய பார்வை புதிய பங்களிப்பை வெளிக்கொணரும். எனில் இவையும் இன்னும் பலவும் காலச்சுவடுக்கு இயல்பாகவே  கிடைக்கப்பெறவும் அல்லது கேட்டு வாங்கப்பட்டுப் பிரசுரிக்கப்படவும் காரணமான கருத்தியல் என்ன? இத்தகைய பல்பொருள் பங்களிப்புகளை ஈர்க்க காலச்சுவடு முன்வைத்த பார்வை என்ன?

லிட்டில் கிட்டிங் (Little Gidding) என்பது இங்கிலாந்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். லண்டனின் மையத்திலிருந்து 70 சொச்சம் மைல்கள். ஒரு உன்னதக் கிறிஸ்தவச் சமூகத்தை உருவாக்கும் திட்டத்தோடு நிக்கோலஸ் பிரார் என்பவர் 1625இல் இதை நிர்மாணித்தார். பல்கலை, பதிப்பகம், மடம், புனித ஸ்தலம் இவற்றின் கலவையாக அமைந்தது. 1642ஆம் ஆண்டு  மன்னர் முதலாம் சார்லஸ் லிட்டில் கிட்டிங்கிற்கு வருகைதந்தார். இதற்கு 300 வருடங்களுக்குப் பின்னர் 1936இல் எலியட் இக்கிராமத்திற்கு வந்தார். அவரது புகழ்பெற்ற ‘quartet’ கவிதைகளில் இறுதிக் கவிதை ‘Little Gidding.’

இக்கிராமம் ஒரு மதச்சமூகமாகக் கவனத்தில் இருந்தாலும் அதற்குப் பதிப்பு வரலாற்றில் ஓர் இடம் உள்ளது. அவர்தம் கொள்கைப்படி அவர்கள் உருவாக்கிய - கட்டமைத்த என்றும் சொல்லலாம் - புதிய, பழைய ஏற்பாட்டின் தொகுதிகளே  அக்கிராமத்திற்குப் பதிப்பு வரலாற்றில் ஓர் இடத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. மத நூல்கள் புனிதங்களாகக் கருதப்பட்டுவந்தன, இப்போதும் கருதப்படுகின்றன. ஆனால் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் இக்குடியில் கடவுளின் பார்வையை ஒருங்கிணைத்து ஒரே தொகுதியாகப் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டை ஒரு தொகுதியாகவும் உருவாக்கினார்கள். இத்தொகுதிகள் முழுமையாக அச்சிடப்பட்ட பக்கங்களை வைத்தே உருவாக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டின் ஐந்து தொகுதிகளும் புதிய ஏற்பாட்டின்  நான்கு  நற்செய்திகளும் சேகரிக்கப்பட்டன. அவற்றோடு பொருந்திப்போகும் படங்களும் கொண்டுவரப்பட்டன. பின்னர் அத்தொகுதிகள் அனைத்தும் பக்கம் பக்கமாகப் பத்தி பத்தியாக, சமயத்தில் வரிகளாகவும் வார்த்தைகளாகவும் வெட்டிப் பல தட்டுகளில் அடுக்கப்பட்டன. பின்னர் மேசையில் வைத்துப் படிக்கத்தக்க பெரிய வடிவில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒருங்கிணைந்த தொகுதி ஒன்றும், புதிய ஏற்பாட்டின் ஒருமித்த தொகுதி ஒன்றும்  உருவாக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டின் ஐந்து தொகுதிகளும் இணைக்கப்பட்டு ‘கடவுளின் ஒருமித்த சட்டம்’ உருவாக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின் நான்கு தொகுதிகளும் இணைக்கப்பட்டு ஒன்றிசைந்த பைபிள் உருவாக்கப்பட்டது.

இந்தச் செய்திகளைப் படித்தபோது எனக்கு காலச்சுவடு 1990களில் உருப்பெற்ற விதம் நினைவுக்கு வந்தது.

தீவிர உள்ளடக்கமுடைய இதழையும் நூல்களையும் வெளியிட்ட முன்னோடி முயற்சிகளிலிருந்து மாறுபட்டு காலச்சுவடு 30 ஆண்டுகளாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவது ஏன்?

காலச்சுவடு தொடங்கப்பட்ட காலமும் சூழலும் வேறு. இந்தியா, பொருளாதாரத் தாராளவாதத்தைக் கைக்கொண்டு வளர்ச்சி அடைந்து வந்த காலம் அது. செயற்கைக்கோள்களை ஏவி அதன்வழி தொலைத்தொடர்புப் புரட்சி நடந்தது, கணினி யுகம் இந்தியாவில் கால் பதித்துப் பெரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கிய காலகட்டம். மேற்படி முன்னேற்றங்கள் அனைத்துமே இடதுசாரிக் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் அறிவுஜீவிகளாலும் கண்மூடித்தனமாக எதிர்க்கப்பட்டன. இக்கட்டத்தில் இருப்பு நிலையை ஆதரிக்கும் பழைமைவாதிகளாக அவர்கள் செயல்பட்டனர். தொலைத்தொடர்பு மேம்பட்டு, டிடிபி தொழில்நுட்பம் அச்சாக்கத்தைப் புரட்டிப்போட்ட சூழலில், நாகர்கோவிலிலிருந்தே இதழையும் பதிப்பகத்தையும் நடத்தும் வாய்ப்பு உருவாகிவந்தது. அடுத்த சில ஆண்டுகளில் கைப்பேசியும் இணையமும் நாமிருக்கும் இடத்தின் வரையறைகளைத் தாண்டிச்செல்ல வழிவகுத்தன. தொடங்கப்பட்ட காலத்தில் தென்திசையில் இந்தியாவின் கடைசிப் பதிப்பகமான காலச்சுவடு, தமிழின் பன்னாட்டுப் பதிப்பகமாக உருப்பெற இந்தப் பொருளாதார, தொழில்நுட்பப் பின்புலம் முக்கியக் காரணம். காலச்சுவடு மிகச்சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டாலும் சுராவின் 50 ஆண்டுகாலப் பணியின் பயன் வலுவான சமூக முதலீடாக இருந்தது.

1990கள், பல புதிய சிந்தனைகளும் விவாதங்களும் தமிழ்ச் சூழலை ஊக்கப்படுத்திய காலம். இவ்விவாதங்கள் வன்மங்களாக வளர்ந்து தனிநபர் தாக்குதல்களும் ஒடுக்குதல்களும் அறிவுலகில் பெரும் பிளவுகளை ஏற்படுத்திய காலமும்கூட. இவற்றை எதிர்கொண்டு கடந்து, மிரட்டல்களுக்கும் உருட்டல்களுக்கும் அடங்க மறுத்து, ஆக்கபூர்வமாக இணைந்து இயங்கும் ஒரு செயல்களத்தை காலச்சுவடு சாத்தியப்படுத்தியது.

இவற்றைத் தாண்டியும் காலச்சுவடு நின்று நிலைபெற சில அடிப்படையான பண்புகள் காரணம். முதலில் கருத்துச் சுதந்திரத்தில் எனக்கிருந்த ஆழமான, இன்றும் தொடரும் நம்பிக்கை. அதைப் பலியிட்டு எதையும் ஈட்ட முடியாது என்ற அறிதல். (தமிழகம் அளவுக்கு, கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக்கொண்ட படைப்பு, பதிப்பு, இதழியல், ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டபடியே அதைத் துச்சமாக, நக்கலாக இழிவுபடுத்துவோரை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.) கருத்துச் சுதந்திரத்தை மத்தாக வைத்தே காலச்சுவடின் கருத்தியல் திரண்டது. இதனால்தான் பல நம்பிக்கைகளை உடையவர்களும் - கருத்து வேறுபாடுகளுக்கு அதற்குரிய மரியாதையைப் பரஸ்பரம் அளித்தபடி - இணைந்து செயல்பட முடிந்தது. முரண்பாடுகளை விவாதித்தல் ஒருபுறம் இருக்க, இணைந்து பங்களிக்க வேண்டிய, பயணிக்க வேண்டிய பொதுத்திட்டத்தை அடையாளம் கண்டு இயங்க முடிந்தது.

1. காலச்சுவடு இதழின் உள்ளடக்கங்களில் பல மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஆனால் பலதரப்பட்ட கருத்துக்களையும் தாங்கி அது தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதில் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்கள் இணைந்து செயல்பட முடியும்.

2. புதுமைப்பித்தன் படைப்புகள்மீது பலவிதக் கருத்துகள் இருக்கும், இருக்க வேண்டும், அதுவே இலக்கியத்தின் அடிப்படை. ஆனால் அவருக்கு ஒரு சீரிய பதிப்பு வெளிவர வேண்டும் என்பதில் ஒருமித்துச் செயல்பட முடியும்.

இப்படிப் பல்வேறு கருத்துகளை வெட்டியும் ஒட்டியும் காலச்சுவடின் செயல்தளம் உருவானது, லிட்டில் கிட்டிங் பைபிள்கள்போல. மாறுபாடுகளை ஏற்று மதித்து விவாதித்து உருவான செயல்தளம்தான் காலச்சுவடின் ஆதார சுருதி. தமிழுக்கு காலச்சுவடின் பங்களிப்புகள் பலப் பலவாக இருப்பினும் அவற்றின் அடிநாதமான செயல்தளத்திலிருந்தே பிற பங்களிப்புகள் அனைத்துமே கிளர்ந்தெழுந்தன என்று நம்புகிறேன்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழா (ஜனவரி 31), லண்டன் (மார்ச் 8), பாரிஸ் (மார்ச் 21) ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘காலச்சுவடு 30’ நிகழ்ச்சிகளில் பேசியதன் கட்டுரை வடிவம்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.