அனைவருக்கும் கிடைக்குமா கல்வி?
அனைவரும் சமமான வாய்ப்பையும் வளர்ச்சியையும் பெற வழிவகை செய்யுமிடமே பள்ளிக்கூடம். பள்ளிகளை அரசு நடத்துவதே இதனை உறுதி செய்வதாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையிடமும் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதுடன், அவர்களைச் சமூகத்துக்குப் பயன் தரும்வகையில் நல்ல குடிமக்களாக மாற்றுவதே பள்ளிகளின் நோக்கம். மாணவர்களிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் மையம் பள்ளி. பல குழந்தைகளுடன் இணைந்து கற்கையில் விட்டுக்கொடுத்தல், கீழ்ப்படிதல், தலைமைப் பண்பு, விதிகளை மதித்தல், அனைவரையும் சமமாக மதித்தல், கடமைகளைச் செய்து உரிமைகளைப் பெறுதல், தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல், பொதுச்சொத்துகளைப் பராமரித்தல், மொழியையும் நாட்டையும் மதித்தல், முன்மாதிரியாக இருத்தல் போன்ற பல சமூகப் பண்புகளைப் பள்ளியால் மட்டுமே வழங்க இயலும்.
மாநில வாரியம் (State Board), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) எனப் பல கல்வி வாரியங்கள் மாணவர்களுக்கிடையே வேறுபாடுகளை விதைக்கின்றன. இதுதவிர நம் சமூகத்தில் வேரோடியிருக்கும் சாதி, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. இவற்றைக் களைந்து, அனை