‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’
“என்னோட பொணத்த கபருஸ்தான்லே பொதைக்க நீங்க அனுமதிக்கலேனா என்ன போச்சு? என் பொணம் நாறீட்டுத் தான் கெடக்கும். முனிசிபாலிட்டிக் காரங்க வந்து எடுத்துட்டுப் போய்ப் பொதைப்பாங்க... அப்ப நான் என்னத்தப் பாத்துட்டு இருக்கப் போறேன்.”
மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி, பானு முஷ்தாக்
பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பானு முஷ்டக் போராடியபோது அவருக்கு விடப்பட்ட மிரட்டலுக்கு அளித்த பதில் இது.
பானுவின் மொழிநடையோடு சேர்த்து அவரது நகை முரணும், இருள் அங்கதமும் வெள்ளைக்காரத் துரைகளுக்குப் பிடித்திருக்க வேண்டும். இதுவரை ஆங்கிலத்துக்குள் வராத தெற்காசிய அம்சங்கள் இவை. அதனால்தான் ஆங்கிலம் இப்போது பன்முகப்பட்ட மொழியாகியிருக்கிறது என்று அறிவிப்பின்போது சொல்லியிருக்கிறார்கள்.