தமிழ்ப் பல்கலைக்கழகம் வீழ்ந்துகொண்டிருக்கும் பதிப்புத்துறை
தஞ்சையின் அடையாளமாக இருப்பது பெரியகோயிலுக்கு அடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். 1981ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ஆம் நாள் அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனால் ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கிவைக்கப்பட்ட தமிழ்க்கோயில் இந்தப் பல்கலைக்கழகம். ஆமாம், ஒரு காலத்தில் அது கோயிலாகத்தான் இருந்தது. அதன் முதல் துணைவேந்தரான வ.அய். சுப்பிரமணியம், தமிழ் மொழியையும் தமிழரது பண்பாட்டையும் உலகம் முழுக்கக் கொண்டுசெல்வதில் இப்பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது என்று கருதினார். அதற்கான அடித்தளங்களைப் பார்த்துப் பார்த்து உருவாக்கினார். கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் என ஐந்து புலங்கள், இருபத்தைந்து துறைகள் என தமிழ் மொழியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கட்டமைக்கப்பட்டது.
மொழியியல் அறிஞரான வ.அய். சுப்பிரமணியம் இருமுறை துணைவ