பறத்தல்
பறத்தல்
ஓவியம்: செல்வம்
டெல்லியில் குளிர்காலம் தொடங்கி விட்டிருந்தது. யாரும் கவனியாதபோதும் தொலைக்காட்சி தன்னைப்போல் ஒலித்துக்கொண்டிருந்தது. செய்திக் காட்சிகள் ஏதோ ஒரு விபத்தை விவரித்துக்கொண்டிருந்தன. தர்ஷினி குட்டியின் கண்களில் உறக்கம் தெரிந்தது. ஆனாலும் அம்மா அம்மாவென்று அழைத்தபடி சினேகாவின் பின்னாலே உறங்காமல் அலைந்துகொண்டிருந்தாள். அவளைப் பிரிந்து வெளிநாடு செல்லும் தவிப்பில் இருந்தாள் சினேகா. மனம் முழுவதும் குழப்பத்தில் இருந்தது. இவளைப் பிரிந்து அப்படியென்ன சாதிக்கப் போகிறோம்? இரண்டு வருடத்திய வீட்டுக்கடன் தவணையை அங்கு சென்றால் இரண்டே மாதத்தில் கணிசமாக அடைத்துவிடலாம்.
“அந்த டிவிய ஆப் பண்ணி