செப்டம்பர் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
செப்டம்பர் 2025
    • கட்டுரை
      ஆணவக்கொலைகளின் உண்மை விலை
      புதிய சாதியவாத உள்ளூர் யதார்த்தங்கள்: சாதி வன்முறையில் இளைய தலைமுறையினர்
      நிசந்தானோ? சொப்பனமோ?
      டிரம்ப் ராஜ்ஜியத்தில் பாரதமாக இருப்பது
    • கதை
      சந்தைக்கடை
    • சிறப்புப் பகுதி
      சிறப்புப் பகுதி
      கால நாடகம்
      அழிவுப் பாதை?
      வாழ்வின் பலவீனமான நகல்
      இம்மைக்கும் மறுமைக்கும் நடுவே
      மீட்பின் நடனம்
    • கற்றனைத்தூறும் -10
      விலக்கப்பட்டோருக்கான கல்வி
    • அஞ்சலி: வே. வசந்தி தேவி (1938-2025)
      என்றென்றும் தோழர்
    • பாரதியியல்
      பாரதியின் முகவுரை பெற்ற இரு பாரத புத்திரிகள் புதிய ஆதாரம்
    • பதிவு
      ‘உடம்பு இருக்கிறது ஆத்மா இல்லை’ பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய விழா
      இலக்கியத்துடன் வாழ்தல்
      பல்லாயிரம் வாழ்வு கண்ட எழுத்துக்காரர்
      நம்மிடையே ஒரு சான்றோன்
    • ஏற்புரை
      ஐம்பது ஆண்டுப் பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      கறைபடிந்த விருதுகள்
    • கவிதைகள்
      ஜெபா கவிதைகள்
    • தலையங்கம்
      அயலாரையும் அரவணைக்கும் அரசியல்
    • கவிதை
      நரம்பில்லாத நாக்கு
      மண்குதிரை கவிதை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2025 அஞ்சலி: வே. வசந்தி தேவி (1938-2025) என்றென்றும் தோழர்

என்றென்றும் தோழர்

அஞ்சலி: வே. வசந்தி தேவி (1938-2025)
ச. தமிழ்ச்செல்வன்

வசந்தி தேவி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992இல் பொறுப்பேற்ற பிறகுதான் அவருடன் எனக்கு நேரடிப் பழக்கம். அதற்கு முன்னால் அவர் தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்க முன்னோடி வி. சர்க்கரைச் செட்டியாரின் பேத்தி, ஜேக்டீ போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர் என்று மட்டுமே அவரைப் பற்றி அறிந்திருந்திருந்தேன்.

அப்போது நான் அஞ்சல் துறையிலிருந்து தப்பி, அறிவொளி இயக்கத்தில் பணி செய்துகொண்டிருந்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தான் அறிவொளி இயக்கத்தின் தலைமை இடமாக இருந்தது. ம.சு. பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் கட்டப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்திருந்த கட்டிடத்தில்தான் பல்கலைக்கழகம் இயங்கியது. ஆகவே நடந்துசென்று சந்திக்கக்கூடிய தூரத்தில்தான் அவர் இருந்தார்.

அவர் பணி ஏற்றதும் செய்த முதல் காரியம் திறன்மிக்க ஆளுமைகளைத் தன் பக்கத்தில் வரவழைத்து வைத்துக்கொண்டதுதான். தமிழ்த் துறைக்கு தொ. பரமசிவன், இளைஞர் நலத்துறைக்கு ச. மாடசாமி, வரலாற்றுத் துறைக்கு கே.ஏ. மணிக்குமார், ஆ.இரா. வேங்கடாசலபதி, ஊடகவியல் துறைக்கு நடராஜன், அருட்செல்வன் என்று தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகளைக் கொண்ட நல்ல குழுவை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் எனக்கு நெருக்கமான ஆளுமைகளாக ஆனார்கள்.

“சேர்ந்து வேலை செய்யும்போதுதான் மனிதர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்” என்பது எனக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். அவரோடு சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. முதல் வாய்ப்பாக அவர் ஆண்-பெண் சமத்துவம் குறித்த கண்காட்சி ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பை எனக்கு வழங்கினார் (பேராசிரியர் பிரேமா வழியாக).

சுமார் 200 படங்களைத் தயார்செய்து முடித்தபோது அதை மக்கள் பார்வைக்கு வைப்பதற்கு முன்னால் தானே நேரில் வந்து பார்த்து ஓகே சொல்ல விரும்பினார். வந்து பார்த்து மகிழ்ந்தார். சில திருத்தங்கள் சொன்னார். நெல்லையில் அக்கண்காட்சியை மக்கள் பார்வைக்கு வைத்ததோடு முடிந்துபோக அவர் விடவில்லை. அப்படங்களை போட்டோ மவுண்ட்டில் ஒட்டி நீண்ட நாள் தாக்குப்பிடிக்கும் விதமாகத் தயாரிக்கச் சொல்லிப் பணம் ஒதுக்கீடு செய்தார். ஒரு பெரிய பெட்டியில் அப்படங்களைப் போட்டுப் பத்திரப்படுத்தி, பல்கலைக்கழகத்திற்குக்கீழ் இயங்கும் எல்லாக் கல்லூரிகளுக்கும் கொண்டுசென்று பார்வைக்கு வைக்கச் சொன்னார். ஒரு கலாச்சாரப் பொருளை எப்படி இயக்கமாக்க வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்புறம் அறிவொளி மகளிர் மாநாடுகளுக்கெல்லாம் அழைத்தோம். அழைத்தபோதெல்லாம் வந்து எம் பெண்களிடம் பேசினார். அவ்வளவு பெண்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. “நீங்களெல்லாம் இத்தனை காலமாக எங்கே இருந்தீர்கள்?” என்று அவர் கேட்ட கேள்வி இன்னும் எங்கள் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வுகளுக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கென அழைத்தபோதெல்லாம் மறுக்காமல் வந்தார். காலப்போக்கில் நான் அவரைச் சந்திக்கப் போனாலே என்ன மாதம், என்ன தேதி என்று சிரித்துக்கொண்டே கேட்பார். அவரிடம் போய் சும்மா உட்கார்ந்து டீ சாப்பிட்டு அரட்டை அடித்துவிட்டெல்லாம் வர முடியாது. அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க மாட்டார். பல சமயம் என்னை உள்ளேயே அழைக்க மாட்டார். வாசலில் வைத்தே வாயிற்காவலர்மூலம் தேதி ஓகே என்றோ இல்லை என்றோ சொல்லி ஒரு நிமிடத்தில் என்னை அனுப்பிவிடுவார். பார்க்காமலே திரும்பிய பொழுதுகள்தான் அதிகம். அவருக்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கும். கட்டாந்தரையிலிருந்து ஒரு மாபெரும் கல்வி வளாகத்தை எழுப்பிக்கொண்டிருந்தார். சம்பிரதாயங்கள் ஏதும் அவரிடம் செல்லாது.

அவருடைய மகள் திருமணம் நடந்த சேதி கேள்விப்பட்டுப் பலரும் “என்ன மேடம் கல்யாணச் சாப்பாடு போடாமலே, எங்களையெல்லாம் அழைக்காமலே திருமணத்தை முடித்துவிட்டீர்களே” என்று கேட்டபோது “திருமணத்துக்கு அவள் என்னை அழைத்ததே பெரிசு. உங்களை எங்கே அழைப்பது” என்று சிரித்துக் கடந்தார்.

வசந்தி தேவி கல்விசார்ந்த கருத்தரங்குகளில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு வாக்கியம் அவர் நமக்கு விட்டுச்சென்ற மகத்தான காவிய வரியாக இன்றும் எம் நெஞ்சங்களில் துடித்துக்கொண்டிருக்கிறது. அது “வகுப்பறைகளின் சன்னல்களைத் திறந்துவைப்போம். வெளிக்காற்று உள்ளே வரட்டும்”.

கவித்துவமான இவ்வாசகத்தைச் சொன்னதோடு நில்லாமல் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தவும் முனைந்தார். பாடத்திட்டத்தில் சமூகச் செயல்பாடுகளை இணைத்தார். மாணவ, மாணவியர் தாம் வாழும் நிலப்பரப்பின் மனிதர்களோடு உறவாடி, உரையாடி அவர்களைப் பற்றிய ஆய்வறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும். அதற்கு மதிப்பெண் உண்டு என்று கொண்டுவந்தார். இளைஞர் நலத்துறையின் மூலம் பேராசிரியர் ச. மாடசாமி அப்பணிகளை ஒருங்கிணைத்தார். மாடசாமி எம் இயக்கத் தோழர் என்பதால் அவருக்கு உதவப்போய் அத்திட்டத்தின் பலன்களை, விளைச்சலை நேரில் காணும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது.

திருநெல்வேலியில் பிரம்மாண்டமாகப் புத்தகக் கண்காட்சியை நடத்துவோம் என்று ஒருநாள் எங்கள் எல்லோரையும் அழைத்து ஆளுக்கு ஒரு வேலையைப் பிரித்துக் கொடுத்தார். மனோ புத்தகக் கண்காட்சி இப்படித்தான் ஆரம்பம் ஆனது. அதில் அவர் செய்த ஒரு காரியம் பாராட்டையும் எதிர்ப்பையும் ஒருசேரக் கொண்டு வந்தது. புத்தகக் கண்காட்சியின் நுழைவாயிலில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை வைத்துப் புத்தகம் வாங்கிச் செல்பவர்களை அதில் பதிவுசெய்ய வேண்டினார்.தான் யார், என்ன தொழில் செய்கிறேன், என்னென்ன புத்தகங்கள், எத்தனை ரூபாய்க்கு வாங்கினேன் என்கிற விவரத்தைப் பதிவுசெய்ய வேண்டினார். கண்காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி அந்தப் பதிவுகளின் தொகுப்பை வெளியிட்டார். கண்காட்சிக்கு வந்தவர்களிலேயே மிகமிகக் குறைவாகப் புத்தகம் வாங்கியவர்கள் பேராசிரியர்களும் ஆசிரியர்களும்தான் என்பதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துரைத்தார்.ஆசிரியர்கள் கடும் கோபம் அடைந்தார்கள். எங்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்திவிட்டார் என்று கொதித்தார்கள். வெட்கப்பட வேண்டிய விஷயத்துக்கு ஏன் கோபப்படுகிறீர்கள் என்று திருப்பிக் கேட்டார்.அதுதான் வசந்தி தேவி. எந்த வர்க்கத்தைத் தன் சொந்த வர்க்கமாகக் கருதினாரோ அந்த வர்க்கத்தை விமர்சிக்க ஒருபோதும் தயங்கியதில்லை. பிற்காலத்தில் அவர் பள்ளிப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி நடத்திய காலத்திலும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தம் உறுப்பினர்களை வாசிக்கத் தூண்டாமல், வாசிப்பே இல்லாத வர்க்கமாக ஆசிரியர்களை வைத்திருப்பதைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்தார்.

இரு முறை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.கல்வித் திட்டத்திலும் கற்பிக்கும் முறைமையிலும் தேர்வு முறையிலும் மாணவர்நலன் சார்ந்த ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடனான கல்வி சார்ந்த உரையாடல் புத்தகமாக வந்து ஓர் அலையை ஏற்படுத்தியது இந்தப் பின்னணியில்தான்.

துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விடைபெற்ற பின்னர் 2002ஆம் ஆண்டு மகளிர் ஆணையத் தலைவி ஆன பிறகும் சில பணிகள் கொடுத்தார், உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகரித்துவந்த பின்னணியை ஆய்வு செய்யவும், அம்மக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் வந்தன.

கல்வியின் அரசியலை கல்வி அமைப்பின் உள்ளீடாக இருக்கும் வர்க்க அரசியலை அவரைப் போலத் தோலுரித்துக் காட்டியவர்கள் வேறு யாரும் இல்லை.அருகமைப் பள்ளிக்காகவும் பொதுப்பள்ளிக்காகவும் பல்வேறு இயக்கங்களை உருவாக்கி நடத்தினார். எங்களை எல்லாவற்றிலும் இணைத்துக்கொண்டார். எங்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

2016இல் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துச் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராகக் களம் இறங்கினார். இது அதிரடியான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் அவரிடம் இருந்ததாக நான் பார்த்தேன். ஒன்று ஜெயலலிதா எதிர்க்கப்பட வேண்டியவர். தான் கல்வியாளராக, அறிவுஜீவியாக இருந்தாலும் களத்தில் இறங்கிச் சமூகக் கடமை ஆற்றுவேன் என்பதை அறிவுலக மினுக்கிகளுக்குக் காட்ட விரும்பினார். இரண்டாவதாக, அந்தத் தேர்தல் பிரச்சாரக் காலத்தை, சென்னைத் தெருக்களில் சந்துபொந்துகளில் நுழைந்து நேரடியாக வறிய மக்களைச் சந்தித்து, அவர்களது குழந்தைகள் எங்கே படிக்கிறார்கள், எப்படிப் படிக்க வைக்கிறார்கள் என்கிற முதல் தகவலைத் திரட்டும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டார். அந்த அனுபவங்களை அவர் நேர்ப்பேச்சுகளிலும் சில கூட்டங்களிலும் எழுத்திலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

வயது அவருக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.கையிலெடுக்கும் எந்தக் காரியத்தையும் அத்தனை ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வார். அதில் என்றும் எமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அவரே திகழ்கிறார்.

பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, உயர்கல்வியும் உயர்பொறுப்புகளும் பெற்று வாழ்ந்த அவர் எப்போதும் எளிய மக்களுக்காக மட்டுமே சிந்தித்தார், பேசினார். இயங்கினார். ஆகவேதான் அவரை நேரில் மேடம் என்று அழைத்தாலும் மனதில் தோழர் என்றே நினைத்திருப்போம்.

  மின்னஞ்சல்: tamizh53@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.