மம்தா சாகர்

கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள வித்யாவனம் பள்ளி, சுமனசா அறக்கட்டளை, காலச்சுவடு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திவரும் எழுத்தாளர்களுக்கான ‘வானகம்’ வதிவிட முகாமில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் இவை. முகாமில் கவிஞர் மம்தா சாகர் தன் கவிதைகளை வாசிக்க, ஜி.ஏ. கௌதம் தமிழில் அவற்றை மொழிபெயர்த்தார்.
நீருக்கு என்ன நினைவிருக்கும்?
நீருக்கு என்ன நினைவிருக்கும்?
எல்லாமே நீரில் வழிந்தோடிவிடுகிறது.
நீரைப்போலவே நீயும்...
அதுபோல் நானும்...
கிளைபிரிந்து வெகுதூரம் இலக்கின்றி நடந்துவிட்டோம்.
எவ்வளவு பேசுகிறோம் எதுவுமே நடக்காததுபோல!
ஒருவரையொருவர் குத்திக்கொண்டதும் உணரவில்லை,
வெகுதூரம் வி
