காட்சி ஊடகத்தின் முதல்வர்
புது தில்லி, இந்தியா பன்னாட்டு மையம். 1993 டிசம்பர் இறுதி நாட்கள். சாகித்திய அகாதமி நடத்திய கவிதை மொழிபெயர்ப்பு முகாமில் பங்கேற்பாளனாகக் கலந்துகொண்டிருந்தேன்.
தேர்ந்தெடுத்த இந்திய மொழிகளிலிருந்து இளம் தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களை அழைத்துத் தங்கவைத்து அவர்களது கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்ப்பது முகாமின் நோக்கம். தமிழ்க் கவிதை சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். நான்குநாட்கள் முகாம். ஒவ்வொரு நாள் இரவும் யாராவது பிரமுகர் முறைவைத்துக் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் விருந்துகொடுத்து
உபசரித்தார்கள்.
அன்றைய தினத்தின் உபசரிப்பாளர் புகழ்பெற்ற இந்திக் கவிஞரும் ஆட்சிப்பணி அதிகாரியும் அப்போதைய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கின் தனிச் செயலாளருமாக இருந்த அசோக் வாஜ்பாய். முகாமின் முதல்நாள் மாலை நடந்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் கவிதை வாசித்து அமர்